உலக வரலாற்றில் இன்று(01-04-2018)

உலக வரலாற்றில் இன்று(01-04-2018)



முட்டாள்கள் தினம்:

 முட்டாள்கள் தினம் உருவானது எப்படி?



 முட்டாள்கள் நாள், ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது.


பின்னர் 1562ம் ஆண்டளவில் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்புமுறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்புமுறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாட தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக ஆரம்பமாயிற்று.

முகமது ஹமீத் அன்சாரி


முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி அவர்கள் 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவர் 1961ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும் இருந்தார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு 1984ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

2017வரை இந்திய துணை குடியரசுத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி இன்று தன்னுடைய 81வது வயதை நிறைவு செய்கிறார். 

முக்கிய நிகழ்வுகள்:

2007ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தமிழ் நூற்கடல் என்று போற்றப்பட்ட தி.வே.கோபாலையர் மறைந்தார்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

1957ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1935ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1815ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் பிரஷ்யாவின் ஷான்ஹாசன் நகரில் (தற்போது ஜெர்மனியில் உள்ளது) பிறந்தார்.

1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.

1565 – ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.

1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.

1815 – இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.

1873 – முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.

1896 – ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.

1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.

1912 – முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.

1936 – ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் போர் ஆரம்பமானது.

1949 – டச்சுக்களிடம் இருந்து யாக்யகர்த்தாவை இந்தோனீசியா கைப்பற்றியது.

1953 – ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.

1954 – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.

1975 – ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1977 – சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

1980 – சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.

1981 – ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

2002 – ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

பிறப்புக்கள்

1647 – ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கலைச் சேர்ந்த மதப்போதகர் (இ. 1693)

1910 – எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)

1910 – ஆர்ச்சர் மார்ட்டின், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2002)

1917 – கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (இ. 2003)

1921 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)

1922 – இட்சாக் ரபீன், இஸ்ரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)

1951 – நிதிஷ் குமார், இந்தியாவின் முன்னாள் அமைச்சர்

1953 – மு. க. ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், உள்ளாட்சித் துறை அமைச்சர்

1968 – குஞ்சராணி தேவி, இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை

1973 – கிரிஸ் வெபர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்:

1940 – அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)

2015 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)

சிறப்பு நாள்:

பொசுனியா எர்செகோவினா – விடுதலை நாள் (1992)
தென் கொரியா – விடுதலை நாள்






உலக வரலாற்றில் இன்று(01-04-2018) உலக வரலாற்றில் இன்று(01-04-2018) Reviewed by Bright Zoom on April 01, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.