உலக வரலாற்றில் இன்று(14-04-2018)
இந்திய அரசியல் சாசன தந்தையின் பிறந்த தினம்
உலக சித்தர்கள் தினம்..!
ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய தீயணைப்பு சேவை தினம்.
பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.
1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோவில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். இறுதியில், 1956ஆம் ஆண்டு புத்த மதத்தில் இணைந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடு இணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் (1956) மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவரது மறைவிற்கு பின் வழங்கப்பட்டது.
1894ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் கினட்டஸ்கோப் ( ) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
முக்கிய நிகழ்வுகள்:
1699 – கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
1849 – ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
1912 – பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.
1915 – துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1944 – பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி மறைந்தார்.
1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.
1962ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியப் பொறியியலாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா மறைந்தார்.
1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் மறைந்தார்.
1978 – ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
1986 – மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
1999 – யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
2007 – தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1126 – இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)
1629 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர் (இ. 1695)
1891 – அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956)
1919 – சம்சாத் பேகம், இந்தியப் பாடகி (இ. 2013)
1922 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)
1927 – பி. ஏ. பெரியநாயகி, திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)
1935 – எரிக் வான் டேனிகன், சுவிட்சர்லாந்து எழுத்தாளர்
இறப்புகள்
1759 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)
1904 – வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)
1950 – இரமண மகரிசி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879)
1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர் (பி. 1860)
1963 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)
1964 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
1986 – சிமோன் ட பொவார், பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1908)
2013 – பி. பி. ஸ்ரீனிவாஸ், இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)
சிறப்பு நாள்
உலக சித்தர்கள் நாள்
இந்திய அரசியல் சாசன தந்தையின் பிறந்த தினம்
உலக சித்தர்கள் தினம்..!
ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய தீயணைப்பு சேவை தினம்.
பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.
1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோவில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். இறுதியில், 1956ஆம் ஆண்டு புத்த மதத்தில் இணைந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடு இணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் (1956) மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவரது மறைவிற்கு பின் வழங்கப்பட்டது.
1894ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் கினட்டஸ்கோப் ( ) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
முக்கிய நிகழ்வுகள்:
1699 – கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
1849 – ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
1912 – பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.
1915 – துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1944 – பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி மறைந்தார்.
1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.
1962ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியப் பொறியியலாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா மறைந்தார்.
1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் மறைந்தார்.
1978 – ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
1986 – மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
1999 – யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
2007 – தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1126 – இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)
1629 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர் (இ. 1695)
1891 – அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956)
1919 – சம்சாத் பேகம், இந்தியப் பாடகி (இ. 2013)
1922 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)
1927 – பி. ஏ. பெரியநாயகி, திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)
1935 – எரிக் வான் டேனிகன், சுவிட்சர்லாந்து எழுத்தாளர்
இறப்புகள்
1759 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)
1904 – வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)
1950 – இரமண மகரிசி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879)
1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர் (பி. 1860)
1963 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)
1964 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
1986 – சிமோன் ட பொவார், பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1908)
2013 – பி. பி. ஸ்ரீனிவாஸ், இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)
சிறப்பு நாள்
உலக சித்தர்கள் நாள்
உலக வரலாற்றில் இன்று(14-04-2018)
Reviewed by Bright Zoom
on
April 14, 2018
Rating:

No comments: