உலக இன்று வரலாற்றில் நடந்தது என்ன? - (31.03.2018)

உலக இன்று வரலாற்றில் நடந்தது என்ன? - (31.03.2018)



ரெனே டெஸ்கார்ட்ஸ்


 மெய்யியல் அறிஞர், கணிதமேதை, தத்துவ மேதை ரெனே டெஸ்கார்ட்ஸ் 1596ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

 1607ஆம் ஆண்டு இவர் லா-பிலெஞ்சிலுள்ள ஜேசூயிட் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கணிதம், இயற்பியல் மற்றும் கலிலியோவின் கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது.

1614ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின், 1615 முதல் 1616 வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் இளங்கலை பட்டமும், பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார். அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்

ஆனால், இவர் கணிதம், இயற்பியல், மெய்யியல், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்பு 1626-ல் ரூல்ஸ் ஃபார் த டைரக்ஷன் ஆஃப் தி மைண்ட் என்ற நூலை எழுதினார். ஒளியியல், வானியல், கணிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

 கணிதத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளான கார்ட்டீசியன் ஆய்வுமுறை
பகுப்பாய்வு வடிவியலை
 கண்டறிந்தார்.

 நவீன தத்துவவியலின் தந்தை என்று புகழப்பட்ட ரெனே டெஸ்கார்ட்ஸ் தனது 53வது வயதில் (1650) மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்:

 1889ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. 

 1921ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது.

1878ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி உலக புகழ்பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரரான ஜாக் ஜான்சன் பிறந்தார்.

1966ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சந்திரனை முதன்முதலாக சுற்றி வந்த லூனா 10 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.

1438 – ஹாப்ஸ்பேர்க்கின் இரண்டாம் ஆல்பேர்ட் ஜெர்மனியின் மன்னனாக முடி சூடினான்.

1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1874 – வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1909 – ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.

1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.

1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.

1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.

1925 – இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் கொல்லப்பட்டனர்.

1937 – டெக்சாஸ் மாநிலத்தில் நியூ லண்டன் நகரில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட ஹிட்லரும் முசோலினியும் கூட்டிணைந்தனர்.

1944 – இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பேர்லின் நகரைத் தாக்கின.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் ஜப்பானுக்கும் நேச நாடுகளிக்கும் இடையில் ஒகினவா சமர் ஆரம்பமாகியது.

1953 – மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

1962 – அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1965 – சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆனார்.

1970 – கம்போடியாவின் மன்னர் நொரொடோம் சிஹானூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.

1971 – பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

1980 – ரஷ்யாவில் வஸ்தோக்-2எம் ஏவுகணை ஏவப்படுகையில் வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

2003 – ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்தியா வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

பிறப்புக்கள்

1828 – வில்லியம் கிரேமர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1908)

1837 – குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. 1908)

1858 – ருடோல்ஃப் டீசல், ஜெர்மனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1913)

1919 – இந்திரஜித் குப்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். (இ. 2001)

1936 – பிரடெரிக் கிளார்க், தென்னாபிரிக்க அதிபர், நோபல் பரிசு பெற்றவர்

இறப்புக்கள்

1889 – வில்லியம் நெவின்ஸ், யாழ் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியர், ஆங்கிலம்-தமிழ் அகராதி தொகுத்து வெளியிட்டவர்

1996 – ஒடீசியஸ் எலீட்டிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர் (பி. 1911)

2007 – பாப் வுல்மர், துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் (பி. 1948)

சிறப்பு நாள்

துருக்கி – கலிப்பொலி நினைவு நாள்



உலக இன்று வரலாற்றில் நடந்தது என்ன? - (31.03.2018) உலக இன்று வரலாற்றில் நடந்தது என்ன? - (31.03.2018) Reviewed by Bright Zoom on March 31, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.