உலக வரலாற்றில் இன்று(05-042018)
தேசிய கடல்சார் தினம்!!
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) 1919ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது.
அதனை நினைவுக்கூறும் வகையில் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல்முறையாக கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.
ஜோசப் லிஸ்டர்
அறுவை சிகிச்சையின் தந்தை, ஜோசப் லிஸ்டர் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
இவரது தந்தை நவீன உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார்.
இவர் லூயிஸ் பாஸ்டர் எழுதிய நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பற்றிய கட்டுரையை படித்தார்.
அதில் பொருட்களை புளிக்கச் செய்யும் கிருமிகள் காற்றில் உள்ளன. அதனால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்பதை அறிந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நுண்கிருமிகளை அழிக்க முடியும் என ஆய்வு செய்து கண்டறிந்தார்.
தற்போது பினாயில் என்றழைக்கப்படும் கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார்.
இவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார்.
மருத்துவ உலகிலேயே முதன்முதலாக இவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது.
இவர் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார்.
அறுவை சிகிச்சையின் முன்னோடி எனப் போற்றப்படும் ஜோசப் லிஸ்டர் தனது 84வது வயதில் (1912) மறைந்தார்.
நிகழ்வுகள்:
1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடி போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
1722 – டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.
1782ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல்முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்.
1792 – அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.
1818 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ’ஹிகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.
1879 – பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
1897 – கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1908ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஜெகஜீவன்ராம், பீகார் மாநிலத்தில் பிறந்தார்.
1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.
1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.
1936 – மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945 – பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.
1946 – 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.
1949 – அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.
1955 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.
1956 – பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.
1956 – இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன வெற்றி பெற்றது.
1957ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளை நிறுவிய ராம.அழகப்பச் செட்டியார் மறைந்தார்.
1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
1964 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1971 – இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1976 – மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
1981 – தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
1998 – அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்:
1588 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679)
1827 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (இ. 1912)
1900 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (இ. 1967)
1908 – ஜெகசீவன்ராம், இந்தியாவின் 4வது துணைப் பிரதமர் (இ. 1986)
1920 – ஆர்தர் ஹெய்லி, ஆங்கிலேய-கனடிய எழுத்தாளர் (இ. 2004)
1933 – க. கைலாசபதி, இலங்கை திறனாய்வாளர், தமிழறிஞர் (இ. 1982)
1937 – ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க எழுத்தாளர்
1947 – குளோரியா மகபகல்-அர்ரொயோ, பிலிப்பீன்சின் 14வது அரசுத்தலைவர்
1958 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (இ. 2009)
இறப்புகள்:
1928 – ராய் கில்னர், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1890)
1957 – ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909)
1962 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911)
1964 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்க ஜெனரல் (பி. 1880)
1975 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1887)
1976 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்க பொறியாளர், இயக்குனர் (பி. 1905)
1992 – சாம் வோல்ற்றன், அமெரிகத் தொழிலதிபர், வோல் மார்ட் நிறுவனர் (பி. 1918)
1993 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (பி. 1974)
1994 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (பி. 1967)
2008 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (பி. 1923)
உலக வரலாற்றில் இன்று(05-042018)
Reviewed by Bright Zoom
on
April 05, 2018
Rating:
No comments: