உலக வரலாற்றில் இன்று(04-04-2018)
நிலக்கண்ணிகள் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம்:
நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புறங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.
நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக்கூறவும் இத்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவரின் பிறந்த தினம்!!
பெ.சுந்தரம் பிள்ளை:
நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார்.
இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891-ல் எழுதினார். அதில் இடம்பெற்ற நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970-ல் அறிவித்தது.
பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை தி டென் தமிழ் ஐடியல்ஸ் என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இவர் பல பட்டங்களை பெற்றுள்ளார். பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவரும், சிறந்த தமிழ் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் (1897) மறைந்தார்.
மாகன்லால் சதுர்வேதி
விடுதலை போராட்ட வீரரான பண்டிட் மாகன்லால் சதுர்வேதி (Pயனெவை ஆயமாயடெயட ஊhயவரசஎநனi) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
திலகர், காந்தி ஆகியோரின் முழக்கங்கள் இவருக்குள் விடுதலை வேட்கையை தூண்டியது. இவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.
இவர் 1943-ல் ஹிம கிரீடினி படைப்புக்காக தேவ் புரஸ்கார் விருது பெற்றார். 1955-ல் இவரது ஹிம தரங்கிணி கவிதைத் தொகுப்பு இந்தி மொழிக்கான முதல் சாகித்ய அகாடமி விருதை வென்றது.
இந்தி இலக்கிய ஆர்வலர்களால் பண்டிட்ஜி என்று அன்போடு அழைக்கப்பட மாகன்லால் சதுர்வேதி தனது 78வது வயதில் (1968) மறைந்தார்.
இவரை நினைவுக்கூறும் விதமாக மாகன்லால் சதுர்வேதி புரஸ்கார் என்ற விருதை சிறந்த கவிஞர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு 1987 முதல் வழங்கி வருகிறது.
முக்கிய நிகழ்வுகள்:
1929ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனத்தை (கார்) தயாரித்த கார்ல் பென்ஸ் மறைந்தார்.
1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் மறைந்தார்.
1973ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.
1975ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1814 – நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.
1841 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.
1850 – இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.
1866 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தார்.
1905 – இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1925 – செருமனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஆங்கிலோ-அமெரிகப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கலில் குறைந்தது 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1949 – பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
1960 – செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்சு ஒப்புக் கொண்டது.
1968 – அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1968 – அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1969 – டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.
1973 – உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.
1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.
1975 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியாவின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1979 – பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
1983 – சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
1984 – அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.
1999 – பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.
2002 – அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பிறப்புகள்:
1855 – மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ.1897)
1892 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமனிய வானியலாளர் (இ. 1979)
1905 – நிரூபன் சக்கரபோர்த்தி, திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2004)
1909 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டடக் கலைஞர் (இ. 1964)
1931 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அமைச்சர் (இ. 1991)
1943 – சி. தன்னாசி, மலேசிய எழுத்தாளர்
1944 – மா. கருப்பண்ணன், மலேசிய எழுத்தாளர்
1948 – அப்துல்லா ஓசுலான், துருக்கிய செயற்பாட்டாளர்
1975 – அக்சய் கண்ணா, இந்தி நடிகர்
1976 – சிம்ரன், இந்தியத் திரைப்பட நடிகை.
1979 – ஹீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (இ. 2008)
இறப்புகள்:
397 – அம்புரோசு, செர்மானிய-இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 338)
1544 – உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500)
1617 – ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவியலர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550)
1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (பி. 1773)
1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)
1929 – கார்ல் பென்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தை வடிவமைத்த செருமானியப் பொறியியலாளர் (பி. 1844)
1968 மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1929)
1979 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (பி. 1928)
1987 – அக்ஞேய, இந்திய எழுத்தாளர் (பி. 1911)
1990 – கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர், கல்விமான்
2012 – கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர், நடிகர்
சிறப்பு தினங்கள்:
நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
தாய்வான், ஹொங்கொங் – சிறுவர் நாள்
செனகல் – விடுதலை நாள்
குழந்தைகள் நாள் (சீனக் குடியரசு. ஆங்காங்)
நிலக்கண்ணிகள் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம்:
நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புறங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.
நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக்கூறவும் இத்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவரின் பிறந்த தினம்!!
நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார்.
இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891-ல் எழுதினார். அதில் இடம்பெற்ற நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970-ல் அறிவித்தது.
பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை தி டென் தமிழ் ஐடியல்ஸ் என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இவர் பல பட்டங்களை பெற்றுள்ளார். பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவரும், சிறந்த தமிழ் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் (1897) மறைந்தார்.
மாகன்லால் சதுர்வேதி
விடுதலை போராட்ட வீரரான பண்டிட் மாகன்லால் சதுர்வேதி (Pயனெவை ஆயமாயடெயட ஊhயவரசஎநனi) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
திலகர், காந்தி ஆகியோரின் முழக்கங்கள் இவருக்குள் விடுதலை வேட்கையை தூண்டியது. இவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.
இவர் 1943-ல் ஹிம கிரீடினி படைப்புக்காக தேவ் புரஸ்கார் விருது பெற்றார். 1955-ல் இவரது ஹிம தரங்கிணி கவிதைத் தொகுப்பு இந்தி மொழிக்கான முதல் சாகித்ய அகாடமி விருதை வென்றது.
இந்தி இலக்கிய ஆர்வலர்களால் பண்டிட்ஜி என்று அன்போடு அழைக்கப்பட மாகன்லால் சதுர்வேதி தனது 78வது வயதில் (1968) மறைந்தார்.
இவரை நினைவுக்கூறும் விதமாக மாகன்லால் சதுர்வேதி புரஸ்கார் என்ற விருதை சிறந்த கவிஞர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு 1987 முதல் வழங்கி வருகிறது.
முக்கிய நிகழ்வுகள்:
1929ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனத்தை (கார்) தயாரித்த கார்ல் பென்ஸ் மறைந்தார்.
1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் மறைந்தார்.
1973ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.
1975ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1814 – நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.
1841 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.
1850 – இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.
1866 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தார்.
1905 – இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1925 – செருமனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஆங்கிலோ-அமெரிகப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கலில் குறைந்தது 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1949 – பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
1960 – செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்சு ஒப்புக் கொண்டது.
1968 – அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1968 – அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1969 – டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.
1973 – உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.
1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.
1975 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியாவின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1979 – பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
1983 – சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
1984 – அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.
1999 – பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.
2002 – அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பிறப்புகள்:
1855 – மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ.1897)
1892 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமனிய வானியலாளர் (இ. 1979)
1905 – நிரூபன் சக்கரபோர்த்தி, திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2004)
1909 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டடக் கலைஞர் (இ. 1964)
1931 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அமைச்சர் (இ. 1991)
1943 – சி. தன்னாசி, மலேசிய எழுத்தாளர்
1944 – மா. கருப்பண்ணன், மலேசிய எழுத்தாளர்
1948 – அப்துல்லா ஓசுலான், துருக்கிய செயற்பாட்டாளர்
1975 – அக்சய் கண்ணா, இந்தி நடிகர்
1976 – சிம்ரன், இந்தியத் திரைப்பட நடிகை.
1979 – ஹீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (இ. 2008)
இறப்புகள்:
397 – அம்புரோசு, செர்மானிய-இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 338)
1544 – உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500)
1617 – ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவியலர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550)
1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (பி. 1773)
1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)
1929 – கார்ல் பென்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தை வடிவமைத்த செருமானியப் பொறியியலாளர் (பி. 1844)
1968 மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1929)
1979 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (பி. 1928)
1987 – அக்ஞேய, இந்திய எழுத்தாளர் (பி. 1911)
1990 – கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர், கல்விமான்
2012 – கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர், நடிகர்
சிறப்பு தினங்கள்:
நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
தாய்வான், ஹொங்கொங் – சிறுவர் நாள்
செனகல் – விடுதலை நாள்
குழந்தைகள் நாள் (சீனக் குடியரசு. ஆங்காங்)
உலக வரலாற்றில் இன்று(04-04-2018)
Reviewed by Bright Zoom
on
April 05, 2018
Rating:
No comments: