உலக வரலாற்றில் இன்று( World History Today 15-04-2018)

உலக வரலாற்றில் இன்று( World History Today 15-04-2018) 



முக்கிய நிகழ்வுகள்

லியானார்டோ டாவின்சி:

உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டாவின்சி 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

 இவர் வேதிப் புகைஇ கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார்.

 பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தனது "தி லாஸ்ட் சப்பர்" ஓவியத்தை 1495-ல் வரையத் தொடங்கிஇ 1498-ல் நிறைவு செய்தார். 

1503-ல் புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கிஇ மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார். 

இவர் மேலும் நீர்க் கடிகாரம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

 விமானம் நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி  கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பது வரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது.

உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும் பன்முகத்திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டாவின்சி 67-வது வயதில் (1519) மறைந்தார்.




1469ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்தார். 

1976ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. 

1865ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் மறைந்தார்.

 1892ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 

1755ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி சாமுவேல் ஜான்சன்இ தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்.

1450 – பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.

1755 – சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்.

1815 – சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.

1865 – ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அதிபரானார்.

1892 – ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1912 – இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.

1923 – இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1943 – கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

1986 – லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது.

1989 – இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர்.

1989 – சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

1997 – மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர்.

1976 – தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

பிறப்புகள்

1452 – லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (இ. 1519)

1469 – குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)

1707 – லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர் (இ. 1783)

1874 – ஜொகான்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1957)

1896 – நிக்கொலாய் செமியோனொவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (இ. 1986)

1907 – நிக்கலாஸ் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)

இறப்புகள்

1865 – ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்க அதிபர் (பி. 1809)

1980 – ஜீன்-போல் சார்ட்டெர், நோபல் பரிசினை ஏற்க மறுத்த பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1905)




உலக வரலாற்றில் இன்று( World History Today 15-04-2018) உலக வரலாற்றில் இன்று( World History Today 15-04-2018) Reviewed by Bright Zoom on April 15, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.