உலக வரலாற்றில் இன்று(( World History Today 18-04-2018)
உலக பாரம்பரிய தினம்...!!
உலக பாரம்பரிய தினம்
உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1982-ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி துனிசியாவில் நடைபெற்ற மாநாடில் சர்வதேச நினைவிடங்கள் தினம்கொண்டாடபரிந்துரைக்கப்பட்டது அடுத்த ஆண்டே யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது.
இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது.
ஜார்ஜ் ஹிட்சிங்ஸ்
கீமோதெரபி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1905ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் என்ற பகுதியில் பிறந்தார்.
1944-ல் இவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2, 6-டைஅமினோப்யூரின் மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டைஅமினோ பைரிமிடின் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்து வந்தார்.
கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை அவருடைய குழு வெளியிட்டது. இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக அவர்களுடன் கூட்டாக 1988-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் மனிதர்களுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் தனது 93வது வயதில் (1998) மறைந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:
இன்று இவரின் 63வது நினைவு தினம்...!!
20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.
இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்த போதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு" பிறந்தது.
குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல், இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். மேலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்" என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுவை நினைத்து வேதனைக்கு ஆளானார்.
'விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறிய இவர் தனது 76வது வயதில் (1955) மறைந்தார்.
முக்கிய நகழ்வுகள்
1025 – போலந்து நாட்டின் முதல் மன்னனாக போலெஸ்லாவ் குரோப்றி முடி சூடினான்.
1797 – ஆஸ்திரியர்களை
நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் வென்றனர்.
1835 – ஆஸ்திரேலியாவில் மிக பிரமாண்டமான மெல்பேர்ண் நகரம் உருவாக்கப்பட்டது.
1859ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே மறைந்தார்.
1880 –ஆம் ஆண்டு மிசூரியில் வீசிய புயல் காற்றுக்கு 99 பேர் உயிரிலந்தனர்.
1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்க்கு 3,000 பேர்
உயிரிலந்தனர்
1912 – ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர்த்தப்பிய 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர்.
1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் ஜி.சுப்பிரமணிய ஐயர் மறைந்தார்.
1930 – பிபிசி வானொலி தனது வழமையான செய்தி வாசிப்பில் இந்நாளில் “எந்த செய்திகளும் இல்லை” என அறிவிக்கப்பட்டது.
1941 – ஜெர்மனியப் படைகள் ஏதன்ஸ் நகரை நெருங்கும் போது கிறீஸின் பிரதமராக இருந்த அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1942 – இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் வெடி குண்டுத் தாக்குதல் நடத்தியது.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்களால் வெ டிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
1949 – அயர்லாந்து நாட்டில் குடியாட்சி சட்டம் நடைமுறைக்கு காெண்டு வரப்பட்டதது.
1954 –ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி எகிப்தின் ஆட்சியை
கமால் அப்துல் நாசர் கைப்பற்றினார்.
1958 – இலங்கையில் அதிபர் பண்டாரநாயக்க செல்வநாயகத்தின் ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980 – ரொடீசியா என அழைக்கப்பட்ட சிம்பாப்வே குடியரசு உருவாக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக
கனான் பனானா பதவிஏற்றார்.
1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் நடை பெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993 – பாகிஸ்தான் அதிபராக இருந்த குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996 – லெபனானில் இருக்கும் ஐநாவின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது இதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1838 –பிரெஞ்சு வேதியியலாளர்
பவுல் எமில் புவபோதிரா்ன் பிறப்பு (இ. 1912)
1858 –இந்தியக் கல்வியாளரான
தோண்டோ கேசவ் கார்வே
பிறப்பு (இ. 1962)
1858 – ஈழத்து எழுத்தாளரும் பதிப்பாளரும்மான
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பிறப்பு (இ. 1917)
1884 – எசுத்தோனிய அரசியல்வாதி ஜான் ஆன்வெல்ட்
பிறப்பு (இ. 1937)
1941 – அயர்லாந்தின் 9-வது அரசுத்தலைவராக இருந்த
மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்
பிறப்பு
1967 – மரியா பெல்லோ, அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
1859 – இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே இறப்பு
(பி. 1814)
1916 – இந்திய இதழியலாளர்
ஜி. சுப்பிரமணிய ஐயர் மறைவு
(பி. 1855)
1955 – செருமனிய-அமெரிக்க இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைவு (பி. 1879)
சிறப்பு நாள்
ஈரான் – இராணுவ நாள்
சிம்பாப்வே – விடுதலை நாள் (1980
உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)
உலக பாரம்பரிய தினம்...!!
உலக பாரம்பரிய தினம்
உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1982-ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி துனிசியாவில் நடைபெற்ற மாநாடில் சர்வதேச நினைவிடங்கள் தினம்கொண்டாடபரிந்துரைக்கப்பட்டது அடுத்த ஆண்டே யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது.
இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது.
ஜார்ஜ் ஹிட்சிங்ஸ்
கீமோதெரபி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1905ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் என்ற பகுதியில் பிறந்தார்.
1944-ல் இவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2, 6-டைஅமினோப்யூரின் மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டைஅமினோ பைரிமிடின் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்து வந்தார்.
கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை அவருடைய குழு வெளியிட்டது. இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக அவர்களுடன் கூட்டாக 1988-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் மனிதர்களுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் தனது 93வது வயதில் (1998) மறைந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:
இன்று இவரின் 63வது நினைவு தினம்...!!
20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.
இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்த போதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு" பிறந்தது.
குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல், இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். மேலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்" என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுவை நினைத்து வேதனைக்கு ஆளானார்.
'விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறிய இவர் தனது 76வது வயதில் (1955) மறைந்தார்.
முக்கிய நகழ்வுகள்
1025 – போலந்து நாட்டின் முதல் மன்னனாக போலெஸ்லாவ் குரோப்றி முடி சூடினான்.
1797 – ஆஸ்திரியர்களை
நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் வென்றனர்.
1835 – ஆஸ்திரேலியாவில் மிக பிரமாண்டமான மெல்பேர்ண் நகரம் உருவாக்கப்பட்டது.
1859ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே மறைந்தார்.
1880 –ஆம் ஆண்டு மிசூரியில் வீசிய புயல் காற்றுக்கு 99 பேர் உயிரிலந்தனர்.
1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்க்கு 3,000 பேர்
உயிரிலந்தனர்
1912 – ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர்த்தப்பிய 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர்.
1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் ஜி.சுப்பிரமணிய ஐயர் மறைந்தார்.
1930 – பிபிசி வானொலி தனது வழமையான செய்தி வாசிப்பில் இந்நாளில் “எந்த செய்திகளும் இல்லை” என அறிவிக்கப்பட்டது.
1941 – ஜெர்மனியப் படைகள் ஏதன்ஸ் நகரை நெருங்கும் போது கிறீஸின் பிரதமராக இருந்த அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1942 – இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் வெடி குண்டுத் தாக்குதல் நடத்தியது.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்களால் வெ டிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
1949 – அயர்லாந்து நாட்டில் குடியாட்சி சட்டம் நடைமுறைக்கு காெண்டு வரப்பட்டதது.
1954 –ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி எகிப்தின் ஆட்சியை
கமால் அப்துல் நாசர் கைப்பற்றினார்.
1958 – இலங்கையில் அதிபர் பண்டாரநாயக்க செல்வநாயகத்தின் ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980 – ரொடீசியா என அழைக்கப்பட்ட சிம்பாப்வே குடியரசு உருவாக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக
கனான் பனானா பதவிஏற்றார்.
1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் நடை பெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993 – பாகிஸ்தான் அதிபராக இருந்த குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996 – லெபனானில் இருக்கும் ஐநாவின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது இதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1838 –பிரெஞ்சு வேதியியலாளர்
பவுல் எமில் புவபோதிரா்ன் பிறப்பு (இ. 1912)
1858 –இந்தியக் கல்வியாளரான
தோண்டோ கேசவ் கார்வே
பிறப்பு (இ. 1962)
1858 – ஈழத்து எழுத்தாளரும் பதிப்பாளரும்மான
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பிறப்பு (இ. 1917)
1884 – எசுத்தோனிய அரசியல்வாதி ஜான் ஆன்வெல்ட்
பிறப்பு (இ. 1937)
1941 – அயர்லாந்தின் 9-வது அரசுத்தலைவராக இருந்த
மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்
பிறப்பு
1967 – மரியா பெல்லோ, அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
1859 – இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே இறப்பு
(பி. 1814)
1916 – இந்திய இதழியலாளர்
ஜி. சுப்பிரமணிய ஐயர் மறைவு
(பி. 1855)
1955 – செருமனிய-அமெரிக்க இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைவு (பி. 1879)
சிறப்பு நாள்
ஈரான் – இராணுவ நாள்
சிம்பாப்வே – விடுதலை நாள் (1980
உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)
உலக வரலாற்றில் இன்று(( World History Today 18-04-2018) உலக பாரம்பரிய தினம்...!!
Reviewed by Bright Zoom
on
April 19, 2018
Rating:

No comments: