பெண் குழந்தைகளை... குறிவைக்கும் பேராபத்துக்கள் !
ஜாக்கிரதை...
உங்க வீட்லயும் 8 வயது பெண் குழந்தை இருக்கா? ஜாக்கிரதை...
இன்று பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சமீபத்தில் கூட நிர்பயா, ஹாசினி, ஆசிபா என பல சின்னஞ்சிறு குழந்தைகளை இத்தகைய பாலியல் வன்கொடுமையால் இழந்துவிட்டோம்.
இதற்கு நாமும் ஒரு காரணமாக தான் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஏனெனில், நம்மை சுற்றி நடக்கும் இந்த கொடுமைகளை மக்களாகிய நாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோமோ தவிர அதற்கான எந்த ஒரு விழிப்புணர்வையும் சமுதாயத்திடம் கொண்டு செல்லாமல் நாம் வேலை வேலை என்று தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
யாரோ ஒருவர் வீட்டில் தானே நடந்தது. நம் வீட்டிலா? நடந்தது என அலட்சியமாக இருந்துவிட்டோம்.
நாம் இழந்தது நம்முடைய தங்கை, அக்கா, தோழி மற்றும் மகளாகவும் கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருந்தால் நாம் இப்படி கையைக்கட்டி கொண்டு இருக்க மாட்டோம்.
இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்பொழுதோ தோன்றியிருக்கும்.
இருப்பினும், சில சமூக ஆர்வலர்கள் அத்தகைய கொடுமைகளை எதிர்த்து இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்ற விழிப்புணர்வுகளை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச், எது பேட் டச் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்க முடியாதபடி செயல்படுவார்கள்.
பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், வேலை செய்பவர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எனவே உங்களின் குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் எவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலக வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
காமுகர்களை எவ்வாறு கண்டறிவது?
காமுகர்கள் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள்.
எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லி கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.
பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது. அது சரி என்று வாதமும் செய்யக்கூடாது.
ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.
பேருந்தில் செல்லும்போது பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் குழந்தைகளை கொடுப்போம். ஆனால், அதிலும் சிலர் காமுகர்கள் இருக்கலாம். அது நமக்கு தெரியாது.
எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே(குட் டச், பேட் டச்) சொல்லி கொடுக்க வேண்டும்.
குறிப்பாக பெற்றோர்களிடம் யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து அதை கூறுவதற்குரிய சுதந்திரத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இன்றைய காலத்திற்கேற்ப உங்கள் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.
உதாரணமாக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.
ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்க வேண்டும்.
அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.
இதை முதலில் உங்களின் குழந்தைகளுக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
உங்களின் வீட்டிலிருந்து இந்த மாதிரி விழிப்புணர்வை தொடங்கி இறுதியில் சமுதாயம் வரை கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
என்ற சமூக அக்கறையுடன் செயல்படு வாேம்..
ஜாக்கிரதை...
உங்க வீட்லயும் 8 வயது பெண் குழந்தை இருக்கா? ஜாக்கிரதை...
இன்று பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சமீபத்தில் கூட நிர்பயா, ஹாசினி, ஆசிபா என பல சின்னஞ்சிறு குழந்தைகளை இத்தகைய பாலியல் வன்கொடுமையால் இழந்துவிட்டோம்.
இதற்கு நாமும் ஒரு காரணமாக தான் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஏனெனில், நம்மை சுற்றி நடக்கும் இந்த கொடுமைகளை மக்களாகிய நாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோமோ தவிர அதற்கான எந்த ஒரு விழிப்புணர்வையும் சமுதாயத்திடம் கொண்டு செல்லாமல் நாம் வேலை வேலை என்று தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
யாரோ ஒருவர் வீட்டில் தானே நடந்தது. நம் வீட்டிலா? நடந்தது என அலட்சியமாக இருந்துவிட்டோம்.
நாம் இழந்தது நம்முடைய தங்கை, அக்கா, தோழி மற்றும் மகளாகவும் கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருந்தால் நாம் இப்படி கையைக்கட்டி கொண்டு இருக்க மாட்டோம்.
இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்பொழுதோ தோன்றியிருக்கும்.
இருப்பினும், சில சமூக ஆர்வலர்கள் அத்தகைய கொடுமைகளை எதிர்த்து இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்ற விழிப்புணர்வுகளை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச், எது பேட் டச் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்க முடியாதபடி செயல்படுவார்கள்.
பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், வேலை செய்பவர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எனவே உங்களின் குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் எவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலக வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
காமுகர்களை எவ்வாறு கண்டறிவது?
காமுகர்கள் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள்.
எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லி கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.
பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது. அது சரி என்று வாதமும் செய்யக்கூடாது.
ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.
பேருந்தில் செல்லும்போது பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் குழந்தைகளை கொடுப்போம். ஆனால், அதிலும் சிலர் காமுகர்கள் இருக்கலாம். அது நமக்கு தெரியாது.
எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே(குட் டச், பேட் டச்) சொல்லி கொடுக்க வேண்டும்.
குறிப்பாக பெற்றோர்களிடம் யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து அதை கூறுவதற்குரிய சுதந்திரத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இன்றைய காலத்திற்கேற்ப உங்கள் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.
உதாரணமாக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.
ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்க வேண்டும்.
அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.
இதை முதலில் உங்களின் குழந்தைகளுக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
உங்களின் வீட்டிலிருந்து இந்த மாதிரி விழிப்புணர்வை தொடங்கி இறுதியில் சமுதாயம் வரை கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
என்ற சமூக அக்கறையுடன் செயல்படு வாேம்..
பெண் குழந்தைகளை குறிவைக்கும் பேராபத்துக்கள் ! ஜாக்கிரதை....
Reviewed by Bright Zoom
on
April 19, 2018
Rating:

No comments: