உலக வரலாற்றில் இன்று(( World History Today (25.04.2018)
உலக மலேரியா தினம்...!
World Malaria Day
உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவேஇ இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007-ல் இருந்து கடைபிடித்து வருகிறது.
மார்க்கோனி(Marconi)
வானொலியின் தந்தை
(Father of the radio) மற்றும் நோபல்(Nobel) பரிசு பெற்ற குக்லியெல்மோ மார்க்கோனி
(Kucliello Marconi)
1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார்.
இவருக்கு இயற்பியலில், குறிப்பாக மின்சாரவியலில் ஆர்வம் பிறந்து, கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார்.
1895-ல் திசை திரும்பும் மின்கம்பம் (Directional return tire ) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு செய்தியை அனுப்பினார். 1897-ல் இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 1901-ல் 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார். இத்தாலி அரசு இவருக்கு மார்க்விஸ் என்ற பட்டத்தை வழங்கியது.
மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுபோக்கு சாதனத்தை வழங்கிய மார்க்கோனி தனது 63வது வயதில் (1937) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
புதுமைப்பித்தன்
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
இவர் எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தார். ஆனால்இ அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள்இ 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள்இ 15 கவிதைகள்இ சில நாடகங்கள்இ எண்ணற்ற மொழிபெயர்ப்புகள்இ புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனைஇ நாசகாரக் கும்பல்இ மனித யந்திரம்இ பொன்ன கரம்இ இது மிஷின் யுகம்இ சாபவிமோசனம்இ கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்இ ஒருநாள் கழிந்ததுஇ சிற்பியின் நரகம்இ செல்லம்மாள் ஆகியவை.
இவர் சொ.வி. ரசமட்டம் மாத்ரு கூத்தன் நந்தன் கபாலி சுக்ராச்சாரி இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் தனது 42-வது வயதில் (1948) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1607 – எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
1829 – மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898 – ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் மறைந்தார்.
1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டனர்.
1916 – அயர்லாந்தில் இராணுவச் சட்டத்தை ஐக்கிய இராச்சியம் பிறப்பித்தது.
1916 – அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945 – நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
1961ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ராபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit)
காப்புரிமத்தைப் பெற்றார்.
1966 – தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1974 – போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1982 – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1983 – ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் “ஹிட்லரின் நாட்குறிப்புகள்” நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் “ஸ்டேர்ன்” இதழ் வெளியிட்டது.
1986 – சுவாசிலாந்தின் மன்னனாக மூன்றாம் முசுவாட்டி முடிசூடினார்.
1988 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.
2005 – இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 – ஜப்பானில் தொடருந்து விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1599 – ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658)
1874 – மார்க்கோனி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 1937)
1906 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் (இ. 1948)
1940 – அல் பசீனோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
1949 – டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பிரெஞ்சு பொருளியலாளர், அரசியல்வாதி
இறப்புகள்
1744 – ஆன்டர்சு செல்சியசு, சுவீடிட வானியலாளர் (பி. 1701)
1989 – வ. சுப. மாணிக்கம், தமிழறிஞர் (பி. 1917
2005 – சுவாமி இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (பி. 1908)
2007 – ஆர்தர் மில்ட்டன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1928)
சிறப்பு நாள்
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து – ஆன்சாக் நாள்
போர்த்துக்கல் – விடுதலை நாள் (1974)
இத்தாலி – நாசிகளிடம் இருது விடுதலை (1945)
ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டின் 115 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 116 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன.
உலக மலேரியா தினம்...!
World Malaria Day
உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவேஇ இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007-ல் இருந்து கடைபிடித்து வருகிறது.
மார்க்கோனி(Marconi)
வானொலியின் தந்தை
(Father of the radio) மற்றும் நோபல்(Nobel) பரிசு பெற்ற குக்லியெல்மோ மார்க்கோனி
(Kucliello Marconi)
1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார்.
இவருக்கு இயற்பியலில், குறிப்பாக மின்சாரவியலில் ஆர்வம் பிறந்து, கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார்.
1895-ல் திசை திரும்பும் மின்கம்பம் (Directional return tire ) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு செய்தியை அனுப்பினார். 1897-ல் இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 1901-ல் 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார். இத்தாலி அரசு இவருக்கு மார்க்விஸ் என்ற பட்டத்தை வழங்கியது.
மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுபோக்கு சாதனத்தை வழங்கிய மார்க்கோனி தனது 63வது வயதில் (1937) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
புதுமைப்பித்தன்
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
இவர் எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தார். ஆனால்இ அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள்இ 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள்இ 15 கவிதைகள்இ சில நாடகங்கள்இ எண்ணற்ற மொழிபெயர்ப்புகள்இ புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனைஇ நாசகாரக் கும்பல்இ மனித யந்திரம்இ பொன்ன கரம்இ இது மிஷின் யுகம்இ சாபவிமோசனம்இ கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்இ ஒருநாள் கழிந்ததுஇ சிற்பியின் நரகம்இ செல்லம்மாள் ஆகியவை.
இவர் சொ.வி. ரசமட்டம் மாத்ரு கூத்தன் நந்தன் கபாலி சுக்ராச்சாரி இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் தனது 42-வது வயதில் (1948) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1607 – எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
1829 – மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898 – ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் மறைந்தார்.
1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டனர்.
1916 – அயர்லாந்தில் இராணுவச் சட்டத்தை ஐக்கிய இராச்சியம் பிறப்பித்தது.
1916 – அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945 – நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
1961ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ராபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit)
காப்புரிமத்தைப் பெற்றார்.
1966 – தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1974 – போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1982 – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1983 – ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் “ஹிட்லரின் நாட்குறிப்புகள்” நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் “ஸ்டேர்ன்” இதழ் வெளியிட்டது.
1986 – சுவாசிலாந்தின் மன்னனாக மூன்றாம் முசுவாட்டி முடிசூடினார்.
1988 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.
2005 – இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 – ஜப்பானில் தொடருந்து விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1599 – ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658)
1874 – மார்க்கோனி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 1937)
1906 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் (இ. 1948)
1940 – அல் பசீனோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
1949 – டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பிரெஞ்சு பொருளியலாளர், அரசியல்வாதி
இறப்புகள்
1744 – ஆன்டர்சு செல்சியசு, சுவீடிட வானியலாளர் (பி. 1701)
1989 – வ. சுப. மாணிக்கம், தமிழறிஞர் (பி. 1917
2005 – சுவாமி இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (பி. 1908)
2007 – ஆர்தர் மில்ட்டன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1928)
சிறப்பு நாள்
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து – ஆன்சாக் நாள்
போர்த்துக்கல் – விடுதலை நாள் (1974)
இத்தாலி – நாசிகளிடம் இருது விடுதலை (1945)
ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டின் 115 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 116 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன.
உலக வரலாற்றில் இன்று(( World History Today (25.04.2018)
Reviewed by Bright Zoom
on
April 25, 2018
Rating:

No comments: