வரலாற்றில் இன்று(22-08-2018)...!!
தியாகத் திருநாள்...
பக்ரீத் பண்டிகை...!!!
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை, உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பனிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10-ம் நாள் கொண்டாடப்படுகின்றது.
முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு,ஒட்டகம் போன்றவற்றை பலியிட கொடுக்கப்படுகிறது.
சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சமாகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றன.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத், இறை தூதர் இப்ராகிம் அவர்களின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாளாகும்.
பண்டிகை வரலாறு :
இறைவனின் தூதர்களாக இசுலாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இசுமாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழிவந்தவர்களே இன்றைய அராபியர்கள்.
இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இப்ராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தார். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராகிமிற்கு கட்டளையிட்டார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இறைச்சியை அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கும் தம் தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
அனைவரும் எல்லா நலனும் பெற்று இன்புற்றிருக்க பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!!
தியாகத் திருநாள்...
பக்ரீத் பண்டிகை...!!!
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை, உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பனிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10-ம் நாள் கொண்டாடப்படுகின்றது.
முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு,ஒட்டகம் போன்றவற்றை பலியிட கொடுக்கப்படுகிறது.
சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சமாகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றன.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத், இறை தூதர் இப்ராகிம் அவர்களின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாளாகும்.
பண்டிகை வரலாறு :
இறைவனின் தூதர்களாக இசுலாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இசுமாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழிவந்தவர்களே இன்றைய அராபியர்கள்.
இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இப்ராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தார். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராகிமிற்கு கட்டளையிட்டார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இறைச்சியை அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கும் தம் தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
அனைவரும் எல்லா நலனும் பெற்று இன்புற்றிருக்க பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!!
வரலாற்றில் இன்று(22-08-2018)...!! தியாகத் திருநாள்... பக்ரீத் பண்டிகை...!!!
Reviewed by Bright Zoom
on
August 22, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
August 22, 2018
Rating:


No comments: