மண்ணில் புதைந்த மாபெரும் நகரம் தனுஷ் கோடி...!

மண்ணில் புதைந்த மாபெரும் 

நகரம் தனுஷ் கோடி...!

history-of-dhanushkodi
1/15
ஆழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி, அழிந்து போன 53 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
Read Less
history-of-dhanushkodi
2/15
இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு.
Read Less
history-of-dhanushkodi
3/15
ஒரு காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கிய இடம். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான வியாபாரத் தொடர்பாக இந்த நகரமே இருந்தது. தொழில் நிமித்தம் தமிழகம் முழுக்க இருந்து ஏராளமானோர் இங்கு வந்து செல்வார்கள்.
Read Less
history-of-dhanushkodi
4/15
இந்தியாவை இலங்கையோடு இணைக்கும் ரயில் நிலையமாகவும் இது இருந்தது. சென்னையிலிருந்து கிளம்பும் போட் மெயில் ரயிலில் இலங்கைக்கு டிக்கெட் வாங்கலாம். தனுஷ்கோடி வரை ரயிலில் வந்து, இங்கிருந்து படகில் தலைமன்னார் செல்லலாம்.
Read Less
history-of-dhanushkodi
5/15
வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான்.
Read Less
history-of-dhanushkodi
6/15
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வழுவிழந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது.
Read Less
history-of-dhanushkodi
7/15
மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல் டிசம்பர் 22 ஆம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன்பின், வங்க கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான் 23 ஆம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது.
Read Less
history-of-dhanushkodi
8/15
இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது. இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டிபோட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Read Less
history-of-dhanushkodi
9/15
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர். அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது.
Read Less
history-of-dhanushkodi
10/15
தனுஷ்கோடி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த பாம்பன் - தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில் அப்படியே கடலில் விழுந்ததில் அதிலிருந்த 115 பேரும் மூழ்கி இறந்தனர். சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது.
Read Less
history-of-dhanushkodi
11/15
53 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இடிபாடுகளில் இன்றும் எஞ்சியிருப்பது தேவாலயம், விநாயகர் கோயில், அஞ்சலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட சில கட்டடங்கள் மட்டும்தான். இந்த அடையாளச் சின்னங்கள் வருடங்கள் செல்லச் செல்ல மேலும் சிதிலமடைந்து வருகின்றன.
Read Less
history-of-dhanushkodi
12/15
புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.
Read Less
history-of-dhanushkodi
13/15
ஊரையே தனக்குள் உள்வாங்கி கொண்ட வங்க கடலால் வளைக்க முடியாமல் போனது தனுஷ்கோடியில் இருந்த துறைமுக பாலமாகும். அந்த அளவிற்கு அந்த பாலம் உலோக கலவைகளால வார்க்கப்பட்டிருந்தது.
Read Less
history-of-dhanushkodi
14/15
தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது.இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத்தொடங்கியது. ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது.
Read Less
history-of-dhanushkodi
15/15
தன்னுடைய அத்தனைஅடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி. தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து அன்று தொலைந்த தனுஷ்கோடி இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் ச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.
Read Less

மண்ணில் புதைந்த மாபெரும் நகரம் தனுஷ் கோடி...! மண்ணில் புதைந்த மாபெரும்   நகரம் தனுஷ் கோடி...! Reviewed by Bright Zoom on August 26, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.