இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு



இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு



வேலு நாச்சியார் :
  • வேலு நாச்சியார், வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே
    அமையப்பெற்றவர். அவரேஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
  • இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்செல்லமுத்து சேதுபதி – சக்கந்தி
    முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730 ஆம் ஆண்டு ஒரே பெண்
    மகளாகத் தோன்றியவர் வேலு நாச்சியார்.
  • இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு,
    ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். சிவகங்கை
    மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.
  • அங்கிலேயர் 1722 ஆம் ஆண்டு சிவகங்கை சீமையின்மீது
    படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும்
    இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர்
    வீரமரணமடைந்தார்.
  • வேலு நாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து,
    ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர் அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன்
    அனுப்பினார்.
  • மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச்
    சென்ற வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதித்துப் போரிட்டார்.
    அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டு
    சிவகங்கையை மீட்டார்.

அஞ்சலையம்மாள் :
  • இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில்உள்ள முதுநகரில் 
  • எளிமையான
    குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள்
    ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே,
    அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்.
  • அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்
    காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
  • மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய
    சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது,
    கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில்
    அனுப்பிவிட்டு மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • குடும்பச் சொத்துகளையும், குடியிருந்த வீட்டையும் விற்று,
    விடுதலைப் போரட்டத்திற்காகச் செலவு செய்தார்.
    நீலன் சிலையை அகற்றும் போரட்டத்தில் தம்முடைய ஒன்பது
    வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும்
    சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள் சிறையில் இருப்பவர்களைப் பார்க்க வந்தபோது, ஒன்பது வயதேயானஅம்மாக்கண்ணு,அஞ்சலையம்மாளின் மகள் என்பதனை அறிந்து, மிகவும் மகிழ்வுற்று, அச்சிறுமியைத் தன்னுடன்வார்தாவில் உள்ள ஆசிரமத்துக்குஅழைத்துச்சென்று லீலாவதி எனப் பெயரிட்டுப்படிக்கவும் வைத்தார்.
  • காந்தியடிகள் அஞ்சலையம்மளைத்தென்நாட்டின் ஜான்சிராணி
    என்றழைத்தார்.

அம்புஜத்தம்மாள் :
  • வசதியான குடும்பத்தில் 1899ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம்எனப் பழமொழிகளையும் திறம்படப் பயின்றார்.
  • வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி
    முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி
    விடுதலையுணர்வை ஊட்டினார்.
  • காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக
    அம்புஜத்தம்மாள் அழைக்கப்பட்டார். தன் தந்தையின் பெயரோடு,
    காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.
  • அம்புஜத்தம்மாள் தாம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம்
    என்னும் அறிய நூலை எழுதியுள்ளார்.1964 ஆம் ஆண்டு தாமரைத்திரு (பத்மஸ்ரீ) விருது பெற்றுள்ளார்.

 இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு

வேலு நாச்சியார்,

அஞ்சலையம்மாள்,

அம்புஜத்தம்மாள்,

Bright Zoom



இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு Reviewed by Bright Zoom on August 23, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.