ஆதி தமிழரின் நாகரீக அடையாளம் பூம்புகார் நகரம்: ஒரு பார்வை!
- THistory Of Poompuhar
ஆதி தமிழரின் நாகரீக அடையாளம் பூம்புகார் நகரம்: ஒரு பார்வை!
1/7
தமிழ் பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ‘புகார் நகரம்’ என்ற பெயருடன் குறிப்பிடப்படும் இந்த ‘பூம்புகார்’ அல்லது ‘காவிரிப்பூம்பட்டிணம்’ எனப்படும் நகரமானது தற்போதைய நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
2/7
சோழ நாட்டின் முக்கிய நாகரிக அடையாளமாக, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் வீற்றிருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி 500ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த துறைமுகம் புதையுண்டு போனது.
3/7
அந்தவகையில் பூம்புகார் நகரம் இன்றும் ஒரு வரலாற்று தலமாக முக்கியத்துவம் பெற்று வீற்றிருக்கிறது. மிகத்தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆதி நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் நகரம் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
4/7
தற்போது 86,000 மக்கள் தொகையை கொண்ட ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் பூம்புகார் நகரத்தின் பெருமையை, பட்டினப்பாலை எனும் நூல் எடுத்துரைக்கிறது. கரிகாற்சோழன் ஆண்ட சோழ நாட்டின் பெருமை இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
5/7
பயண வசதிகள்
பூம்புகார் நகரத்துக்கு சாலைமார்க்கமாக மிக எளிதாக பயணம் செய்யலாம். தஞ்சாவூர் அல்லது கும்பகோணத்துக்கு வருகை தரும்போதே இந்நகரத்திற்கும் செல்வது எளிது.
6/7
பயண வசதிகள்
ரயில் மார்க்கமாக பயணிக்க விரும்பினால் நாகப்பட்டிணம் அல்லது மயிலாடுதுறை ரயில் நிலையங்கள் மூலம் பூம்புகார் நகருக்கு செல்லலாம்.
Read Less
7/7
பருவநிலை
தமிழ்நாட்டின் எல்லா நகரங்களையும் போன்றே கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் பூம்புகார் நகரமும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் சூழலை கொண்டுள்ளது. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பருவத்தில் இந்த நகருக்கு சுற்றுலா மேற்கொள்வது உகந்ததாக இருக்கும்.
ஆதி தமிழரின் நாகரீக அடையாளம் பூம்புகார் நகரம்: ஒரு பார்வை!
Reviewed by Bright Zoom
on
August 28, 2018
Rating: 5

No comments: