All Exam-2019- பொது அறிவு வினா விடைகள்...!

All  Exam-2019- பொது அறிவு வினா விடைகள்...!

💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠தமிழ் நாட்டின் காலநிலை ———–வகையைச் சார்ந்தது
 – அயன மண்டல

💠ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலவும் கால நிலை ———– ஆகும்
 – தென்மேற்கு பருவக்காற்று காலம்

💠தமிழ் நாட்டில் இரப்பர் அதிகமாக விளையும் மாவட்டம் எது? 
கன்னியாகுமரி

💠தேக்கு மரமும், மூங்கில் மரமும் ———– வகை காடுகளைச் சார்ந்தது
 – அயன மண்டல அகன்ற இலைக் காடுகள்

💠தமிழ் நாட்டில் மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள் காணப்படும் இடம் எது?
 –பிச்சாவரம்

💠ஆனைமலைப் பகுதியிலும், நீலகிரி மலைகளிலும் காணப்படும் காடுகள் எது
 –மலையகக் காடுகள்

💠மேற்கத்திய இடையூறு காற்றால் மழைபெறும் இடம் எது 
– பஞ்சாப்

💠பின்னடையும் பருவக்காற்றால் மழைபெறும் பகுதி எது
 – தமிழ்நாடு

💠வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது
 –நார்வெஸ்டர்ஸ்

💠இந்தியாவில் 25 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறும் இடம் எது 
தார்பாலைவனம்

💠பருவக் காற்றுக் காடுகளின் வேறு பெயர் என்ன
 – இலையுதிர்க் காடுகள்

💠தமிழ் நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் எது
 – பழனி

💠அந்தமான் நிகோபர் தீவுகளில் காணப்படும் காடுகள் எது
 – பசுமை மாறாக் காடுகள்

💠குளிர்காலத்தில் நல்ல மழைப்பொழிவைப் பெறும் இடம் எது 
– ஆந்திரப் பிரதேசம்

💠மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் ஒன்று சேருமிடம் எது 
– நீலகிரி மலை

💠வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கணவாய் எது 
செங்கோட்டை கணவாய்

💠தமிழ் நாட்டின் முதல் அணுமின் நிலையம் உள்ள இடம் எது
 – கல்பாக்கம்

💠மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் அமைந்த பகுதி –தக்காணப் பீடபூமி

💠தீபகற்ப பீடபூமியை இரு சமமற்ற பகுதியாகப் பிரிக்கும் ஆறு எது – நர்மதை

💠ஜவ்வாது மலை அமைந்துள்ள மாவட்டம் எது?
 - வேலூர்

💠லாவா எனப்படும் எரிமலைக் குழம்பால் உருவாகி கருப்பு மண்ணால் ஆன பகுதி எது
 -மாளவ பீடபூமி

💠ஆந்திர கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள ஏரி எது
 - கொல்லேரு ஏரி

💠உலகிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர் எது 
ஆரவல்லி மலைத்தொடர்

💠தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது 
ஆனைமுடி

💠கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகளுக்கு இடையே உள்ள கடற்கரை எது
 - சோழ மண்டல கடற்கரை

💠ஆனைமுடி சிகரத்தின் உயரம்
 - 2695மீ

💠இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி 
பழவேற்காடு ஏரி

💠வேம்பநாடு ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது 
-கேரளா

💠உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை எது
 - மெரினா கடற்கரை

💠வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) எங்கு அமைந்துள்ளது?
 - காவலூர்

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

All Exam-2019- பொது அறிவு வினா விடைகள்...! All  Exam-2019- பொது அறிவு வினா விடைகள்...! Reviewed by Bright Zoom on June 06, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.