TNPSC - பொதுத்தமிழ் யாப்பிலக்கணம் பற்றிய குறிப்புகள்!

TNPSC - பொதுத்தமிழ்
யாப்பிலக்கணம் பற்றிய குறிப்புகள்!
Bright Zoom

🌺 மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.

🌺 இது செய்யுள்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

🌺 உறுப்பியலில் யாப்பின் ஆறு உறுப்புகளான எழுத்து, அசை, சீர;, தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.

எழுத்து:

🌺 யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படும்.

🌺 எழுத்துகளால் ஆனது 'அசை" எனப்படும்.

(எ.கா.) :

நாணல் - இச்சொல்லில், நா - நெடில், ண - குறில், ல் - ஒற்றெழுத்து.

அசை:

🌺 ஓரேழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும்.

🌺 இது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

🌺 அசைப்பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை.

நேரசை:

🌺 குறில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் தனித்தும், நெடில் ஒற்றெடுத்தும் வருவது நேரசை எனப்படும்.

(எ.கா.) :

குறில் தனித்து வரல் - க.

குறில் ஒற்றுடன் வரல் - கல்.

நெடில் தனித்து வரல் - கா.

நெடில் ஒற்றுடன் வரல் - கால்.

நிரையசை:

🌺 குறில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றும், குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றும் வருவது நிரையசை.

(எ.கா.) :

இருகுறில் - அணி

இருகுறில் ஒற்று - அணில்

குறில்நெடில் - விழா

குறில்நெடில் ஒற்று - விழார்


TNPSC - பொதுத்தமிழ் யாப்பிலக்கணம் பற்றிய குறிப்புகள்! TNPSC - பொதுத்தமிழ்  யாப்பிலக்கணம் பற்றிய குறிப்புகள்! Reviewed by Bright Zoom on August 25, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.