மே 02 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 02 மாலை நேரச் செய்திகள்
அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செய்திகள் !



உலகச் செய்திகள்
ஏர்பஸ் நிறுவனம் முடிவு :

உலகின் மிகப்பெரிய ஏ 380 விமானத்தின் தயாரிப்பை அடுத்த ஆண்டுடன் நிறுத்திக்கொள்ள ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஸ்கிஃப் ஏவுகணை :

மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை ரஷ்யா வடிவமைத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு நீட்டித்தது :

பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து வரும் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :

அனைத்து தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை நிலுவையில் வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் நிதிஷ்குமார் வேண்டுகோள் :

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்பி வருவதால், களப்பணியாற்றத் தயாராகுமாறு அரசு அதிகாரிகளை முதலமைச்சர் நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :

வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேருந்து போக்குவரத்திற்கு தடை :

ஆரஞ்சு மண்டலங்களில் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள் :

அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு 2வது முறையாக பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முழுவதும் சிவப்பு மண்டலம்... சுகாதார அமைச்சர் :

டெல்லியின் அனைத்து மாவட்டங்களும் மே 17ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக இருக்கும் என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் முடிவு :

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தள்ளுபடி செய்ய வலியுறுத்தல் :

அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆணையர் எச்சரிக்கை :

சேலத்தில் காவலாளிகள் நியமிக்கப்படாத ஏ.டி.எம்-கள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட மாநில தொழிலாளர்கள் போராட்டம் :

சென்னையில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டுச் செய்திகள்
தொடர்ந்து விளையாடுவேன் :

2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று நியூசிலாந்து வீரர் ராஸ்டெய்லர் கூறியுள்ளார்.

மே 02 மாலை நேரச் செய்திகள் மே 02 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 02, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.