Bright Zoom Today News
மே 02 மாலை நேரச் செய்திகள்
அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செய்திகள் !
உலகச் செய்திகள்
ஏர்பஸ் நிறுவனம் முடிவு :
உலகின் மிகப்பெரிய ஏ 380 விமானத்தின் தயாரிப்பை அடுத்த ஆண்டுடன் நிறுத்திக்கொள்ள ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஸ்கிஃப் ஏவுகணை :
மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை ரஷ்யா வடிவமைத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு நீட்டித்தது :
பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து வரும் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
அனைத்து தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை நிலுவையில் வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் நிதிஷ்குமார் வேண்டுகோள் :
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்பி வருவதால், களப்பணியாற்றத் தயாராகுமாறு அரசு அதிகாரிகளை முதலமைச்சர் நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேருந்து போக்குவரத்திற்கு தடை :
ஆரஞ்சு மண்டலங்களில் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள் :
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு 2வது முறையாக பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழுவதும் சிவப்பு மண்டலம்... சுகாதார அமைச்சர் :
டெல்லியின் அனைத்து மாவட்டங்களும் மே 17ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக இருக்கும் என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் முடிவு :
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தள்ளுபடி செய்ய வலியுறுத்தல் :
அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆணையர் எச்சரிக்கை :
சேலத்தில் காவலாளிகள் நியமிக்கப்படாத ஏ.டி.எம்-கள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் போராட்டம் :
சென்னையில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டுச் செய்திகள்
தொடர்ந்து விளையாடுவேன் :
2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று நியூசிலாந்து வீரர் ராஸ்டெய்லர் கூறியுள்ளார்.
மே 02 மாலை நேரச் செய்திகள்
அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செய்திகள் !
உலகச் செய்திகள்
ஏர்பஸ் நிறுவனம் முடிவு :
உலகின் மிகப்பெரிய ஏ 380 விமானத்தின் தயாரிப்பை அடுத்த ஆண்டுடன் நிறுத்திக்கொள்ள ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஸ்கிஃப் ஏவுகணை :
மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை ரஷ்யா வடிவமைத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு நீட்டித்தது :
பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து வரும் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
அனைத்து தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை நிலுவையில் வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் நிதிஷ்குமார் வேண்டுகோள் :
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்பி வருவதால், களப்பணியாற்றத் தயாராகுமாறு அரசு அதிகாரிகளை முதலமைச்சர் நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேருந்து போக்குவரத்திற்கு தடை :
ஆரஞ்சு மண்டலங்களில் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள் :
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு 2வது முறையாக பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழுவதும் சிவப்பு மண்டலம்... சுகாதார அமைச்சர் :
டெல்லியின் அனைத்து மாவட்டங்களும் மே 17ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக இருக்கும் என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் முடிவு :
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தள்ளுபடி செய்ய வலியுறுத்தல் :
அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆணையர் எச்சரிக்கை :
சேலத்தில் காவலாளிகள் நியமிக்கப்படாத ஏ.டி.எம்-கள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் போராட்டம் :
சென்னையில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டுச் செய்திகள்
தொடர்ந்து விளையாடுவேன் :
2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று நியூசிலாந்து வீரர் ராஸ்டெய்லர் கூறியுள்ளார்.
மே 02 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 02, 2020
Rating:

No comments: