Bright Zoom Today News
மே 04 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு... தேர்வுத்துறை அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
தற்காலிக மாற்றம் :
ஆஸ்கர் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆஸ்கர் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று மாலை... :
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார்.
மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை :
புலம்பெயரும் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல்... உத்தரவு :
ஆந்திராவில் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு :
கர்நாடகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இலவச பேருந்து சேவையை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்து அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் :
மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு :
மே 31ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை ஆலோசனை :
தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை :
சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மே 17ஆம் தேதி வரை இலவசம் :
சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
ரூ.1,000 உதவித்தொகை :
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியின் 36 ஊராட்சிகளில் உள்ள 1,300 மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ரூ.1,000 உதவித்தொகை வழங்கியுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
மேட்ச் பிக்சிங் :
மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த முகமது ஆசிப், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மே 04 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு... தேர்வுத்துறை அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
தற்காலிக மாற்றம் :
ஆஸ்கர் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆஸ்கர் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று மாலை... :
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார்.
மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை :
புலம்பெயரும் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல்... உத்தரவு :
ஆந்திராவில் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு :
கர்நாடகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இலவச பேருந்து சேவையை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்து அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் :
மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு :
மே 31ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை ஆலோசனை :
தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை :
சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மே 17ஆம் தேதி வரை இலவசம் :
சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
ரூ.1,000 உதவித்தொகை :
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியின் 36 ஊராட்சிகளில் உள்ள 1,300 மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ரூ.1,000 உதவித்தொகை வழங்கியுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
மேட்ச் பிக்சிங் :
மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த முகமது ஆசிப், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
Bright Zoom Today News மே 04 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 04, 2020
Rating:

No comments: