திப்பு சுல்தான் இறந்த தினம்:
💣திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்) மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782-ம் ஆண்டிலிருந்து 1799-ம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான வாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில- மைசூர் போர் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.
💣மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில- மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார்.
💣மே 4, 1799-ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் போரின் போது இறந்தார்.
💣திப்புவின் மைசூர் அரசை பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர். ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம் என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லெஸ்லி
💣ஆடுகளை போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட புலியை போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.
சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம் :
🔥 மே 4ம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
🔥 அவர்களை நினைவுக்கூறுவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகப் பின்பற்றப்படுகிறது.
தியாகராஜ சுவாமிகள்:
👉 'தியாகப் பிரம்மம்" என்று போற்றப்படும் இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 1767ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.
👉 ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சுவாமி நாரத உபாசனை மந்திரத்தை இவருக்கு உபதேசித்தார். பக்தியுடன் அதை உச்சரித்து வந்த இவருக்கு நாரத முனிவரே காட்சி கொடுத்து சங்கீத ஸ்வர ரகசியங்கள் அடங்கிய 'ஸ்வரார்ணவம்" என்ற அரிய நூலை வழங்கியதாக கூறப்படுகிறது.
👉 இவரது இசைத்திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ஆனால், ராம பக்தியில் திளைத்திருந்த இவர் மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
👉 இவர் கீர்த்தனைகள் இயற்றுவது, அவற்றிற்கு இசையமைத்து பாடுவது, வேத பாராயணம் செய்வது, புராணங்கள் கற்பது, இசையை மற்றவர்களுக்கு கற்றுத்தருவது என பல செயல்களை செய்தார்.
👉 இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய தியாகராஜ சுவாமிகள் 1847ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 1940ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி பிரபல அமெரிக்க நாவல் ஆசிரியரும், அறுவை சிகிச்சை நிபுணருமான ராபின் குக் (சுழடிin ஊழழம) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார்.
👉 2000ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தேர்வு செய்யப்பட்டார்.
உலக வரலாற்றில் (4-5-20) இன்று
Reviewed by Bright Zoom
on
May 05, 2020
Rating:

No comments: