Bright Zoom Today News
மே 30 மாலை நேரச் செய்திகள்
வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க... முதல்வர் உத்தரவு
- முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா :
சீனா புதிய தொழில்நுட்பங்களுடன் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது.
மனிதர்களை தாக்காது :
வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதோடு, அவை மனிதர்களை தாக்காது என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
மாநிலச் செய்திகள்
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு :
மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் உத்தரவு :
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று சம்பளத்தை வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் கூறியுள்ளார்.
தனிநபர் கடன் பெறலாம் - அமைச்சர் அறிவிப்பு :
ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.
2 ஆண்டுகள் சிறை தண்டனை :
மகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகைப்பிடிப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விரைவில் 11 எண்கள் :
இந்தியாவில் விரைவில் 11 எண்களை கொண்ட செல்போன் எண் நடைமுறைக்கு வரவுள்ளது.
மத்திய அரசு தெரிவிப்பு :
ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 15 இடங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் வெளியீடு :
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பு :
ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் கர்நாடகா, தெலுங்கானா, உத்தரகாண்ட், ஹரியானா, இமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்பதிவு தொடங்கியது :
தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
மாவட்டச் செய்திகள்
ரூ.5 லட்சம் நிவாரணம் :
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஜூன் 10ஆம் தேதி முடிவு :
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து ஜூன் 10ஆம் தேதி முடிவு செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
மே 30 மாலை நேரச் செய்திகள்
வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க... முதல்வர் உத்தரவு
- முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா :
சீனா புதிய தொழில்நுட்பங்களுடன் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது.
மனிதர்களை தாக்காது :
வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதோடு, அவை மனிதர்களை தாக்காது என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
மாநிலச் செய்திகள்
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு :
மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் உத்தரவு :
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று சம்பளத்தை வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் கூறியுள்ளார்.
தனிநபர் கடன் பெறலாம் - அமைச்சர் அறிவிப்பு :
ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.
2 ஆண்டுகள் சிறை தண்டனை :
மகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகைப்பிடிப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விரைவில் 11 எண்கள் :
இந்தியாவில் விரைவில் 11 எண்களை கொண்ட செல்போன் எண் நடைமுறைக்கு வரவுள்ளது.
மத்திய அரசு தெரிவிப்பு :
ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 15 இடங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் வெளியீடு :
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பு :
ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் கர்நாடகா, தெலுங்கானா, உத்தரகாண்ட், ஹரியானா, இமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்பதிவு தொடங்கியது :
தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
மாவட்டச் செய்திகள்
ரூ.5 லட்சம் நிவாரணம் :
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஜூன் 10ஆம் தேதி முடிவு :
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து ஜூன் 10ஆம் தேதி முடிவு செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Bright Zoom Today News மே 30 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 30, 2020
Rating:

No comments: