Bright Zoom Today News
மே 30 காலை நேரச் செய்திகள்
வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர்.. இன்று ஆலோசனை - செய்திகள் !
உலகச் செய்திகள்
அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி :
சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரஷ்யா முடிவு :
தற்போதைய சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததும், தானே சொந்தமாக ஒரு விண்வெளி மையத்தை கட்டமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அனுமதி :
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 20 நபர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 60 நபர்களுக்கு பணியாற்ற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டக் குறைப்பு, பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள் குறித்த தங்களது பரிந்துரையை வல்லுநர்குழு ஒருவாரத்திற்குள் சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இன்று ஆலோசனை :
வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடனுதவி வழங்குவது பற்றி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஜூன் 15ஆம் தேதி :
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு :
வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை திறப்பு :
பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (31ஆம் தேதி) திறக்கப்படவுள்ளது.
இன்று மீண்டும் ஆலோசனை :
மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 30) மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக அரசுக்கு கோரிக்கை :
கோயம்பேடு வணிகவளாகத்தை புணரமைத்து மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் :
மேற்கு வங்கத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மேலாண்மை இயக்குநர் உத்தரவு :
சென்னை மாநகரப் பேருந்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு :
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,119 கன அடியில் இருந்து 2,250 கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டென்னிஸ் தொடர் :
செக் குடியரசில் நடந்த டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெத்ரா குவித்தோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை கரோலினா முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மே 30 காலை நேரச் செய்திகள்
வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர்.. இன்று ஆலோசனை - செய்திகள் !
உலகச் செய்திகள்
அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி :
சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரஷ்யா முடிவு :
தற்போதைய சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததும், தானே சொந்தமாக ஒரு விண்வெளி மையத்தை கட்டமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அனுமதி :
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 20 நபர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 60 நபர்களுக்கு பணியாற்ற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டக் குறைப்பு, பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள் குறித்த தங்களது பரிந்துரையை வல்லுநர்குழு ஒருவாரத்திற்குள் சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இன்று ஆலோசனை :
வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடனுதவி வழங்குவது பற்றி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஜூன் 15ஆம் தேதி :
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு :
வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை திறப்பு :
பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (31ஆம் தேதி) திறக்கப்படவுள்ளது.
இன்று மீண்டும் ஆலோசனை :
மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 30) மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக அரசுக்கு கோரிக்கை :
கோயம்பேடு வணிகவளாகத்தை புணரமைத்து மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் :
மேற்கு வங்கத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மேலாண்மை இயக்குநர் உத்தரவு :
சென்னை மாநகரப் பேருந்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு :
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,119 கன அடியில் இருந்து 2,250 கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டென்னிஸ் தொடர் :
செக் குடியரசில் நடந்த டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெத்ரா குவித்தோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை கரோலினா முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
Bright Zoom Today News மே 30 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 30, 2020
Rating:

No comments: