Bright Zoom Today News
ஜுன் 19 மாலை நேரச் செய்திகள்
பெயில் ஆனாலும் பாஸ்... தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்கா பரிசீலனை:
இந்தியாவிற்கு வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்குவது பற்றி பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நடவடிக்கை:
கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலின்போது சிறைபிடித்த 10 இந்திய ராணுவ வீரர்களை நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சீனா விடுவித்துள்ளது.
33 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை நடவடிக்கை:
ரஷ்யாவிடம் இருந்து 33 புதிய போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மத்திய அரசிடம் விமானப்படை முன்வைத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு:
10ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு கவச ஆடைகளையும், பிரம்புத் தடிகளையும் வழங்க ஏற்பாடு:
கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு, உடல் பாதுகாப்பு கவச ஆடைகளையும், பிரம்புத் தடிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் முற்றிலும் கடன் இல்லாத நிலையை எட்டியது:
ஜியோ பங்குகளை விற்பனை செய்தல் மற்றும் உரிமை வெளியீடு ஆகியவற்றிலிருந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. இந்த நிதி திரட்டல் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே சமயம் வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான நாட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை:
நலவாரிய உறுப்பினர் அல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
ராமர்கோவில் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்:
சீனாவுடனான மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து அயோத்தி ராமர்கோவில் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மாவட்டச் செய்திகள்
கடும் நடவடிக்கை:
காய்கறி, மளிகை, உணவு பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் விலகல்:
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மானி தெரிவித்துள்ளதால் கங்குலிக்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
ஜுன் 19 மாலை நேரச் செய்திகள்
பெயில் ஆனாலும் பாஸ்... தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்கா பரிசீலனை:
இந்தியாவிற்கு வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்குவது பற்றி பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நடவடிக்கை:
கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலின்போது சிறைபிடித்த 10 இந்திய ராணுவ வீரர்களை நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சீனா விடுவித்துள்ளது.
33 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை நடவடிக்கை:
ரஷ்யாவிடம் இருந்து 33 புதிய போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மத்திய அரசிடம் விமானப்படை முன்வைத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு:
10ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு கவச ஆடைகளையும், பிரம்புத் தடிகளையும் வழங்க ஏற்பாடு:
கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு, உடல் பாதுகாப்பு கவச ஆடைகளையும், பிரம்புத் தடிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் முற்றிலும் கடன் இல்லாத நிலையை எட்டியது:
ஜியோ பங்குகளை விற்பனை செய்தல் மற்றும் உரிமை வெளியீடு ஆகியவற்றிலிருந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. இந்த நிதி திரட்டல் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே சமயம் வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான நாட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை:
நலவாரிய உறுப்பினர் அல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
ராமர்கோவில் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்:
சீனாவுடனான மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து அயோத்தி ராமர்கோவில் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மாவட்டச் செய்திகள்
கடும் நடவடிக்கை:
காய்கறி, மளிகை, உணவு பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் விலகல்:
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மானி தெரிவித்துள்ளதால் கங்குலிக்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
Bright Zoom Today News ஜுன் 19 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 19, 2020
Rating:

No comments: