Bright Zoom Today News
ஜுன் 12 காலை நேரச் செய்திகள்
இ-பாஸ் அனுமதி வழங்க வேண்டாம்... மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கம்:
செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.
மாநிலச் செய்திகள்
திரும்ப ஒப்படைக்க உத்தரவு:
மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக்கவசங்கள், உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை இன்று மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்க்கல்வித்துறை உத்தரவு:
ஒடிசாவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒடிசா உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும்:
10ஆம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பாடத்திட்டத்தில் விளையாட்டையும் சேர்க்க நடவடிக்கை:
புதிய கல்விக்கொள்கையின் கீழ், பாடத்திட்டத்தில் விளையாட்டையும் ஒரு அங்கமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 40வது கூட்டம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 40வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இன்று நடைபெற உள்ளது.
6,998 பேர் சுவாமி தரிசனம்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை 6,998 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
மாவட்ட நிர்வாகங்களுக்கு வாய்மொழி உத்தரவு:
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி வழங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் பழனிசாமி:
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
மாநகர காவல்துறை எச்சரிக்கை:
சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் போட்டோவோ, வீடியோவோ எடுக்கக்கூடாது என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றிரவு மழை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
விளையாட்டுச் செய்திகள்
மீண்டும் விண்ணப்பிக்க போவதாக ட்வீட்:
காமன்வெல்த் பளு தூக்குதலில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சஞ்ஜிதா சானு, அர்ஜுனா விருது பெற மீண்டும் விண்ணப்பிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு அட்டவணையில் மாற்றம்:
2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்க உள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜுன் 12 காலை நேரச் செய்திகள்
இ-பாஸ் அனுமதி வழங்க வேண்டாம்... மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கம்:
செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.
மாநிலச் செய்திகள்
திரும்ப ஒப்படைக்க உத்தரவு:
மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக்கவசங்கள், உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை இன்று மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்க்கல்வித்துறை உத்தரவு:
ஒடிசாவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒடிசா உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும்:
10ஆம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பாடத்திட்டத்தில் விளையாட்டையும் சேர்க்க நடவடிக்கை:
புதிய கல்விக்கொள்கையின் கீழ், பாடத்திட்டத்தில் விளையாட்டையும் ஒரு அங்கமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 40வது கூட்டம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 40வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இன்று நடைபெற உள்ளது.
6,998 பேர் சுவாமி தரிசனம்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை 6,998 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
மாவட்ட நிர்வாகங்களுக்கு வாய்மொழி உத்தரவு:
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி வழங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் பழனிசாமி:
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
மாநகர காவல்துறை எச்சரிக்கை:
சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் போட்டோவோ, வீடியோவோ எடுக்கக்கூடாது என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றிரவு மழை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
விளையாட்டுச் செய்திகள்
மீண்டும் விண்ணப்பிக்க போவதாக ட்வீட்:
காமன்வெல்த் பளு தூக்குதலில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சஞ்ஜிதா சானு, அர்ஜுனா விருது பெற மீண்டும் விண்ணப்பிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு அட்டவணையில் மாற்றம்:
2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்க உள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Bright Zoom Today News ஜுன் 12 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 12, 2020
Rating:

No comments: