TNPSC CCSE-4, Group-2
தேர்வு - 2022..!
ஞானக்கூத்தன் பற்றிய பொது அறிவு குறிப்புகள்..!
General Knowledge Tips for gnaanakkooththan tamil..!
Bright Zoom,
ஞானக்கூத்தன் :
★ இயற்பெயர் - அரங்கநாதன்
★ பிறந்த ஊர் - நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருஇந்தளூர்.
★ 'திருமந்திரம்" நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார்.
★ இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார்.
★ இவரின் கவிதைகள், ‘கல்கி’, ‘காலச்சுவடு’ மற்றும் ‘உயிர்மெய்’ போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
★ இவர் 'பிரச்சினை" என்கிற கவிதையின் மூலம் அறிமுகமானார்.
◆ அன்று வேறு கிழமை,
◆ சூரியனுக்குப் பின்பக்கம்,
◆ கடற்கறையில் சில மரங்கள்,
◆ மீண்டும் அவர்கள்.
◆ பென்சில் படங்கள்.
போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
★ இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற".
★ க.நா.சுப்பிரமணியத்தின் ‘இலக்கிய வட்டம்’, சி.மணியின் ‘நடை’ போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது.
★ இவர் மையம், விருட்சம் (தற்போது நவீன விருட்சம்) மற்றும் கணையாழி பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார்.
★ இலக்கிய பங்களிப்பிற்கான விஷ்ணுபுரம் விருதினைப் பெற்றுள்ளார்.
No comments: