மாலை நேரச் செய்திகள்
ஜனவரி 11|
Bright Zoom Today,Evening news - January -11
ஆதார் எண் இணைப்பு அவசியம்.. தமிழக அரசு உத்தரவு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
போக்குவரத்து துண்டிப்பு:
அமெரிக்க மாகாணமான கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மாநிலச் செய்திகள்
ஆதார் எண் இணைப்பு அவசியம்:
பி.எம்.கிசான் திட்ட பயனாளிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணை உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் அடுத்த தவணைத்தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்று முதல் அமல்:
புதுச்சேரியில் பால் கொள்முதல் விலை உயர்வை தொடர்ந்து பால் விற்பனை விலையும் ரூ.4 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
JEE நுழைவுத் தேர்வு:
JEE நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியை தளர்த்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
25 ஊழியர்கள் பணிநீக்கம்:
ஆவினில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின் இணைப்பு ஆணை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50,000 விவசாய பயனாளர்களில் 50,000வது பயனாளி உட்பட 5 நபர்களுக்கு மின் இணைப்பு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
பஞ்சரத்ன கீர்த்தனை:
திருவையாறு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை தொடங்கி வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
உம்ரான் மாலிக் சாதனை:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான உம்ரான் மாலிக் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். இதன் மூலம் அதிவேகத்தில் பந்து வீசிய இந்திய வீரர் என்ற சாதனையில் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
நியூசிலாந்து பேட்டிங்:
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
900 புள்ளிகள்:
ICC டி20 கிரிக்கெட் தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
No comments: