உலக வரலாற்றில் இன்று
10.04.2018
உலக ஹோமியோபதி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையை மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாளை உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜாக் மைனர்
வடஅமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தைஇ ஜாக் மைனர் 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார்.
இவர் பறவைகள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டிஇ தனது நிலத்தில் ஒரு குளத்தை உருவாக்கினார்.
1911 முதல் ஏராளமான வாத்துகள் வரத் தொடங்கின. ஏறக்குறைய 50 ஆயிரம் பறவைகள் அங்கு இருந்தன.
1909-ல் வலசை போகும் (இடப்பெயர்வு) பறவைகளின் பாதையைக் கண்காணிக்க அவற்றிற்கு பட்டயம் கட்டும் முறையை மேம்படுத்தினார்.
உலகில் இத்தகைய முறையை முதன்முதலாக மேம்படுத்தியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
1923-ல் தான் கண்டறிந்த முறைகள் மற்றும் நீர்ப்பறவைகள் பாதுகாப்பு ஆய்வுகள் அடங்கிய ஜாக் மைனர் அண்ட் தி பேர்ட்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பள்ளி சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்ட பெருமைமிக்க மற்றும் வாழ்நாள் முழுவதும் பறவைகள் பாதுகாப்புக்காக பாடுபட்ட ஜாக் மைனர் தனது 79வது வயதில் (1944) மறைந்தார்.
நிகழ்வுகள்
1658 – ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.
1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
1741 – புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.
1790 – ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.
1815 – இந்தோனீசியாவில் டம்போரா மலை தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.
1821 – கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
1826 – துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1848 – இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.
1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.
1869 – கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.
1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1963 – ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.
1972 – வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
1979 – டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1991 – இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
1992 – லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
1998 – அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.
2002 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
2006 – இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1870 (பழைய முறை) – விளாடிமிர் லெனின் (இ. 1924)
1887 – பெர்னாடோ ஹொசே, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1971)
1898 – ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர் (இ. 1878)
1917 – ரொபேர்ட் வூட்வார்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1979)
1918 – ஜோர்ன் அட்சன், சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைத்தவர் (இ. 2008)
1927 – மார்ஷல் நிரென்பேர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
இறப்புகள்
1585 – பாப்பரசர் 13வது கிரெகரி, பி. 1502)
1688 – பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் நாட்டவர் (பி. 1617)
1931 – கலீல் ஜிப்ரான், லெபனான் கவிஞர், ஓவியர் (பி. 1883)
1995 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1896)
2012 – என்.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர்
2015 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், வர்ணனையாளர் (பி. 1930

No comments: