உலக வரலாற்றில் இன்று(( World History Today (21-04-2018)
இன்று தேசிய சிவில் சேவை தினம்(National Civil Service Day)
இவர்களை மதிப்போம்... போற்றுவோம்...!!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதி தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கால மாற்றத்தின்
சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் ஒவ் ஒரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
மாக்ஸ் வெபர்(Max Weber)
உலக புகழ்பெற்ற சமூகவியலாளர் மாக்ஸ் வெபர் 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள எர்ஃபர்ட் நகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மாக்ஸ்மில்லியன் கார்ல் எமில் வெபர்(Maximilian Carl Emil Weber)
இவர் 1903-ல் பிரபல முன்னணி சமூக அறிவியல் இதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த இதழில் ஏராளமாக சமூக அறிவியல் கட்டுரைகள் எழுதினார்.
1905-ல் இவர் எழுதிய(The Protestant Eight and the Spirit of Mathematics)
'தி ப்ரொடஸ்டன்ட் எதிக் அன்ட் தி ஸ்பிரிட் ஆஃப் கேப்பிடலிசம்" கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது. பின்பு அது புத்தகமாக வெளியிடப்பட்டது.
பொது நிர்வாகத்துறையிலும், சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளை தொடங்கி வைத்த மாக்ஸ் வெபர் தனது 56வது வயதில் (1920) மறைந்தார்.
வி.கிருஷ்ணமூர்த்தி
சிறுவர்களுக்கான கதை எழுதுவதில் சிறந்து விளங்கிய வி.கிருஷ்ணமூர்த்தி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் முதன்முதலாக கலைமகள் இதழில் 'குல்ருக்" என்ற கதை எழுதினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது.
இவர் கௌசிகன் என்ற புனைப்பெயரில் பல கதைகளை எழுதி வந்தார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறி 'வாண்டு மாமா" என்று பெயர் சூட்டினார்.
கல்கியின் 'கோகுலம்" குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் தனது 89வது வயதில் (2014) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தார்.
கிமு 753 – ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
கிமு 43 – ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
1509 – ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1526 – பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
1792 – பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
1863 – கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
1916 – இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
1822 – இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.
1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 – பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1967 – கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
1989 – பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1994 – சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
பிறப்புகள்
1651 – யோசப் வாஸ் அடிகள், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)
1837 – பிரெட்ரிக் பேஜர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1922)
1864- மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)
1882 – பேர்சி பிரிட்ஜ்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1961)
1889 – பவுல் காரெர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1971)
1925 – வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (இ. 2014)
1926 – இரண்டம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி
1956 – மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
1910 – மார்க் டுவைன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
1938 – முகமது இக்பால், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞர் (பி. 1877]])
1946 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1883)
1964 – பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
1965 – எட்வர்ட் ஆப்பில்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
1978 – டி.ஆர்.மகாலிங்கம், தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர் (பி. 1923)
சிறப்பு நாள்
ரித்வான் முதல் நாள் – பஹாய் சமயம்
இன்று தேசிய சிவில் சேவை தினம்(National Civil Service Day)
இவர்களை மதிப்போம்... போற்றுவோம்...!!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதி தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கால மாற்றத்தின்
சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் ஒவ் ஒரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
மாக்ஸ் வெபர்(Max Weber)
உலக புகழ்பெற்ற சமூகவியலாளர் மாக்ஸ் வெபர் 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள எர்ஃபர்ட் நகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மாக்ஸ்மில்லியன் கார்ல் எமில் வெபர்(Maximilian Carl Emil Weber)
இவர் 1903-ல் பிரபல முன்னணி சமூக அறிவியல் இதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த இதழில் ஏராளமாக சமூக அறிவியல் கட்டுரைகள் எழுதினார்.
1905-ல் இவர் எழுதிய(The Protestant Eight and the Spirit of Mathematics)
'தி ப்ரொடஸ்டன்ட் எதிக் அன்ட் தி ஸ்பிரிட் ஆஃப் கேப்பிடலிசம்" கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது. பின்பு அது புத்தகமாக வெளியிடப்பட்டது.
பொது நிர்வாகத்துறையிலும், சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளை தொடங்கி வைத்த மாக்ஸ் வெபர் தனது 56வது வயதில் (1920) மறைந்தார்.
வி.கிருஷ்ணமூர்த்தி
சிறுவர்களுக்கான கதை எழுதுவதில் சிறந்து விளங்கிய வி.கிருஷ்ணமூர்த்தி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் முதன்முதலாக கலைமகள் இதழில் 'குல்ருக்" என்ற கதை எழுதினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது.
இவர் கௌசிகன் என்ற புனைப்பெயரில் பல கதைகளை எழுதி வந்தார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறி 'வாண்டு மாமா" என்று பெயர் சூட்டினார்.
கல்கியின் 'கோகுலம்" குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் தனது 89வது வயதில் (2014) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தார்.
கிமு 753 – ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
கிமு 43 – ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
1509 – ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1526 – பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
1792 – பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
1863 – கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
1916 – இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
1822 – இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.
1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 – பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1967 – கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
1989 – பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1994 – சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
பிறப்புகள்
1651 – யோசப் வாஸ் அடிகள், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)
1837 – பிரெட்ரிக் பேஜர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1922)
1864- மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)
1882 – பேர்சி பிரிட்ஜ்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1961)
1889 – பவுல் காரெர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1971)
1925 – வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (இ. 2014)
1926 – இரண்டம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி
1956 – மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
1910 – மார்க் டுவைன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
1938 – முகமது இக்பால், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞர் (பி. 1877]])
1946 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1883)
1964 – பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
1965 – எட்வர்ட் ஆப்பில்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
1978 – டி.ஆர்.மகாலிங்கம், தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர் (பி. 1923)
சிறப்பு நாள்
ரித்வான் முதல் நாள் – பஹாய் சமயம்
உலக வரலாற்றில் இன்று(( World History Today (21-04-2018)
Reviewed by Bright Zoom
on
April 22, 2018
Rating:

No comments: