உலக வரலாற்றில் இன்று(( World History Today (22-04-2018)

உலக வரலாற்றில் இன்று(( World History Today (22-04-2018)



உலக புவி தினம் :

அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாப்போம்!!

 புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவை மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gallard Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். எனவே அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார்.

1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி புவியைப் பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக புவி தினமாக மாறி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விளாதிமிர் லெனின்
(Vladimir Lenin)

'லெனின்" என்ற பெயரால் உலகம் முழுதும் நன்கறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ்.

இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார். மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் ஒன்றை தொடங்கினார்.

1917ல் மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் தனது 53ம் வயதில் (1924) மறைந்தார்.

 இவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோலியம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மோன்டால்சினி


 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (Rita Levy Montalcini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

இத்தாலி அரசு 1938-ல் யூதர்களுக்கு மருத்துவத்தில் தடைவிதித்தது. இதனால், இவர் தனது அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

 நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டும் புரோட்டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய், அல்சீமர், மலட்டுத்தன்மை சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.

இவருக்கு நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்த கண்டுபிடிப்புக்காக 1986-ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவருக்கு ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் தடை விதித்த அதே இத்தாலி அரசிடம், 'நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்" என்ற பட்டத்தை பெற்ற ரீட்டா லெவி மோன்டால்சினி தனது 103வது வயதில் (2012) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

 1500ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ஐரோப்பிய போர்ச்சுகீசியரான பெட்ரோ கப்ரால் (Petrol Cabral ) முதன்முறையாக பிரேசிலை கண்டுபிடித்தார்.


1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.

1889 – நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி (Guthrie) ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.

1898 – அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
1912 – ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.

1915 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர (Ypres) ஜெர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஒல்லாந்தியா என்ற இடத்தில் தரையிறங்கினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

1970 – முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.
1983 – ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ் அறிவித்தது.

1992 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.

1997 – அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1997 – பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

2000 – ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

2004 – வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.

2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

பிறப்புகள்

1451 – முதலாம் இசபெல்லா, எசுப்பானிய அரசி (இ. 1504)

1724 – இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவியலாளர் (இ. 1804)

1870 – விளாதிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924)

1881 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசியாவின் 10வது பிரதமர் (இ. 1970)

1899 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1977)

1904 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)

1909 – ரீட்டா லெவி மோண்டால்சினி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 2012)

1916 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிசு இசையமைப்பாளர் (இ. 1999)

1937 – ஜேக் நிக்கல்சன், அமெரிக்க நடிகர்

1940 – க. சட்டநாதன், ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர்

1981 – ஜொனாதன் ட்ரொட், பிரித்தானியத் துடுப்பாளர்

1982 – காகா, பிரேசில் காற்பந்து வீரர்

இறப்புகள்

296 – காயுஸ் (திருத்தந்தை)
1616 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (பி. 1547)

1989 – எமீலியோ சேக்ரே, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-இத்தாலியர் (பி. 1905)

1994 – ரிச்சர்ட் நிக்சன், 37வது அமெரிக்க அரசுத்தலைவர் (பி. 1913)

2002 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (பி. 1949)

2013 – லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (பி. 1930)

சிறப்பு நாள்


பூமி நாள்












உலக வரலாற்றில் இன்று(( World History Today (22-04-2018) உலக வரலாற்றில் இன்று(( World History Today (22-04-2018) Reviewed by Bright Zoom on April 22, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.