தினசரி நடப்பு நிகழ்வுகள்
ஜுன் 19, 2019
TNPSC CCSE-4 தேர்வுக்கான
முக்கிய நடப்பு நிகழ்வுகள்
பூமியைப் போன்ற இரண்டு கோள்கள் கண்டுபிடிப்பு !!
பூமியைப் போன்ற மேலும் இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரீஸ் எனப்படும் மேஷ விண்மீன் குழாமில் அமைந்துள்ள குறு விண்மீனை சுற்றிவரும் இரு கோள்கள், பூமியை ஒத்த சூழலில் அமைந்துள்ளதாக ஜெர்மானிய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பூமியிலிருந்து 12.5 ஒளிவருட தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கோள்களின் இயக்கத்தை 3 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் சூரியனை சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கோள்களைப் போலவே, அவை இரண்டும் இயங்குவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் முதல் செயற்கைக்கோள் !!
இலங்கையிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட ராவணா-1 செயற்கைக்கோள், அமெரிக்காவின் சிக்னஸ்-1 விண்வெளி ஓடம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த செயற்கைக்கோளுடன், ஜப்பான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த செயற்கைக்கோள்களும் அந்த மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
400 கி.மீ. உயரம் மற்றும் 51.6 டிகிரி கோணம் கொண்ட சுற்றுவட்டப்பாதையில் ராவணா-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
அதனுடன், ஜப்பானைச் சேர்ந்த 2 செயற்கைக்கோள்களும், நேபாளத்தின் ஒரு செயற்கைக்கோளும் அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டன.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு !!
பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களைப் பதிவு செய்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு சொற்குவைத் திட்டம் என்ற பெயரில் இணையதளப் பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படவுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட சொற்குவைத் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
பூங்காவை கண்காணிக்கும் போலீஸ்
ரோபோ !!
அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் பணியில் போலீஸ் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் போலீசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி உள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், “ஹெச்பி ரோபோகாப்” என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோ 4 புறமும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TNPSC CCSE-4 தேர்வுக்கான
முக்கிய நடப்பு நிகழ்வுகள்
No comments: