TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !! ..1

,


TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!

பொது அறிவு வினா விடைகள்!!

வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.



பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!

போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!

சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
 – 1969

 அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? 
–பாராளுமன்றம்

 இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன? 
– 18 வருடம்

 கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மத்திய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 
–1976

 இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
 – ஜாஹிர் உஷேன் 

மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு? 
–ஐந்து(5) ஆண்டுகள்

 தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார்? 
–சேர்மன்

 எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது?
 – 2004

 பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது? 
– 1858




பொதுத்தமிழ் வினா விடைகள்!!


💥கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனை —– பாடல் கூறுகிறது? 
புறநானூறு

💥கடலில் செல்லும் பெரிய கப்பல் ——– எனப்படும். 
 நாவாய்
💥யாரைத் தமிழர் “யவனர்கள்” என அழைத்தனர்? – 
கிரேக்கரையும், உரோமானியரையும்

💥தமிழர் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை, முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிடும் நூல்? 
 தொல்காப்பியம்
💥நூலகம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல் –
 லைப்ரரி (Library)
💥 ———-ம் ஆண்டில் பூம்புகார் அருகில் உள்ள கிழார்வெளியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கி.மு.3ம் நூற்றாண்டைச் சார்ந்த பொருட்கள் கிடைத்தன. –
 1963
💥கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்களில் எந்த சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது? – 
சூரியன், ஸ்வதஸ்திகம், ஆறு

💥”வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” என்னும் பாடல் வரி எழுதியவர்? – 
கவிஞர் தாராபாரதி

💥நூலகத்தின் பல்வேறு பெயர்கள் 
புத்தகச் சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், பண்டாரம், நூல்நிலையம்




பொதுத்தமிழ் வினா விடைகள்!!
💥தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
- கவிஞர் காசி ஆனந்தன்

💥ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? – 
இயைபு சொற்கள்

💥நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு …….. ஆக இருக்கும். 
அசதி

💥தமிழ்க்கும்மி என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? 

 கனிச்சாறு

💥பாவலரேறு என்னும் சிறப்புப் பெயருடையவர் யார்?
 – பெருஞ்சித்திரனார்

💥கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? 
 எட்டு
💥மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுவது எது? 
மொழி
💥மனிதனை பிற உயிரினங்களிம் இருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்ட உதவுவது? 
 மொழி
💥யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியினை வியந்து பாடியவர் யார்? –
 பாரதியார்


பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 1940-ல் வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றலுக்கு சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் வழங்கிய விருது 
 நாவலர்

💥ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய காப்பியங்கள் – 
சிலப்பதிகாரம், மணிமேகலை

💥சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் 
 ரா.பி.சேதுப்பிள்ளை

💥உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் –
 ரா.பி.சேதுப்பிள்ளை

💥ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் – 
கம்பர் கழகம்
💥சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத்தலைவராகச் செயல்பட்டவர் 
 வையாபுரிப்பிள்ளை

💥வையாபுரிப்பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தை எவ்வாறு கூறுவர் – 
பொற்காலம்

💥1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றவர் –
 வையாபுரிப்பிள்ளை

💥நாட்டிற்கு உழைப்பதற்காக திரு.வி.க. அவர்கள் எக்கல்லூயில் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விலகினார் –
இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி

💥திரு.வி.கலியாணசுந்தரனார் எழுதிய அரசியல் நூல்களில் ஒன்று –
 தமிழ்நாட்டுச் செல்வம்

TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !! ..1  TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !! ..1 Reviewed by Bright Zoom on June 18, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.