அனைத்திற்கும் ஒரே மருந்து !!
முருங்கை பூ உடன் தேன்
நல்லதையே உண்போம் நலமுடன் வாழ்வோம் !!
அனைத்திற்கும் ஒரே மருந்து !!
இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் உடல் சோர்வு, கண் பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன் போன்றவையாகும். கடந்த ஐம்பது வருடகால வாழ்க்கைமுறை மாற்றத்தின் பலன்களை இன்று அனுபவிக்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையுடன் கூடிய உணவுபழக்கங்கள்.
அன்று விவசாயம் சார்ந்து இயங்கிய நாம் இயல்பாகவே நல்ல உணவுபழக்கங்களை கொண்டிருந்தோம். அது மெல்ல மெல்ல நகரமயத்திற்கு சென்று காலை 9 முதல் மாலை 6 வரையிலான புதிய வேலைஃவாழ்க்கைமுறை, பொருளாதாரத்தை மையப்படுத்திய வாழ்க்கை என்று மாறத்தொடங்கிய நாள்முதல் அதற்கு ஏற்றாற்போல் நமது உணவுபழக்கமும் மாறிவிட்டது.

உதாரணமாக, காலையில் பழைய கஞ்சி குடித்துவிட்டு மண்ணில் வேலை செய்த மக்கள் இன்று முதுமையிலும் நலமுடன் வாழ்கின்றனர். ஆனால், இன்று மேற்கத்திய உணவுமுறை ஆதிக்கம் மற்றும் தினமும் ஒரே வகையான தோசை, பொங்கல் போன்ற உணவுகள் நமது ஆரோக்கியத்தை கொஞ்சம் ஆட்டிப்பார்த்துவிட்டது என்றே சொல்லலாம்.
இன்றைய வாழ்க்கை சூழல் இப்படித்தான் என்பது நிதர்சனம். ஆனால், நாம் நலமுடன் வாழ வேண்டும் என்பதும் அவசியம். ஆகவே, அன்றுபோல் இயற்கையாய் அமைந்த உணவுபழக்கங்கள் போல் இல்லாமல் நாமே நமது உடலை படித்து நமக்கு ஏற்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய தலைமுறை சந்திக்கும் உடல் கேடுகளை நாம் மேலே பார்த்தோம். அவை அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது. அந்த மந்திர சொல்தான் 'முருங்கை". நமது உணவில் தினமும் முருங்கை கீரை, காய், பூ என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்வது அவசியம். இதில் சமைத்த முருங்கைக்காயை விட கீரை மிக நல்லது. அதையும்விட முருங்கை பூ உடன் தேன் கலந்து உண்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இன்று எல்லாப் பகுதிகளிலும் முருங்கை மரங்கள் ஏராளம். அப்படி முருங்கை தோப்பில் சேகரிக்கப்படும் சுத்தமான முருங்கை பூ தேன் இப்போது சந்தையில் கிடைக்கிறது.
நமது இயல்பான வாழ்க்கை முறையில் உணவுபழக்கம் எவ்வாறாக இருந்தாலும் தினமும் ஒரு கரண்டி இந்த முருங்கை பு+ தேன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்ல பலனை தரும்.

முருங்கை பூ உடன் தேன்
நல்லதையே உண்போம் நலமுடன் வாழ்வோம் !!
அனைத்திற்கும் ஒரே மருந்து !!
இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் உடல் சோர்வு, கண் பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன் போன்றவையாகும். கடந்த ஐம்பது வருடகால வாழ்க்கைமுறை மாற்றத்தின் பலன்களை இன்று அனுபவிக்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையுடன் கூடிய உணவுபழக்கங்கள்.
அன்று விவசாயம் சார்ந்து இயங்கிய நாம் இயல்பாகவே நல்ல உணவுபழக்கங்களை கொண்டிருந்தோம். அது மெல்ல மெல்ல நகரமயத்திற்கு சென்று காலை 9 முதல் மாலை 6 வரையிலான புதிய வேலைஃவாழ்க்கைமுறை, பொருளாதாரத்தை மையப்படுத்திய வாழ்க்கை என்று மாறத்தொடங்கிய நாள்முதல் அதற்கு ஏற்றாற்போல் நமது உணவுபழக்கமும் மாறிவிட்டது.

உதாரணமாக, காலையில் பழைய கஞ்சி குடித்துவிட்டு மண்ணில் வேலை செய்த மக்கள் இன்று முதுமையிலும் நலமுடன் வாழ்கின்றனர். ஆனால், இன்று மேற்கத்திய உணவுமுறை ஆதிக்கம் மற்றும் தினமும் ஒரே வகையான தோசை, பொங்கல் போன்ற உணவுகள் நமது ஆரோக்கியத்தை கொஞ்சம் ஆட்டிப்பார்த்துவிட்டது என்றே சொல்லலாம்.
இன்றைய வாழ்க்கை சூழல் இப்படித்தான் என்பது நிதர்சனம். ஆனால், நாம் நலமுடன் வாழ வேண்டும் என்பதும் அவசியம். ஆகவே, அன்றுபோல் இயற்கையாய் அமைந்த உணவுபழக்கங்கள் போல் இல்லாமல் நாமே நமது உடலை படித்து நமக்கு ஏற்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய தலைமுறை சந்திக்கும் உடல் கேடுகளை நாம் மேலே பார்த்தோம். அவை அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது. அந்த மந்திர சொல்தான் 'முருங்கை". நமது உணவில் தினமும் முருங்கை கீரை, காய், பூ என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்வது அவசியம். இதில் சமைத்த முருங்கைக்காயை விட கீரை மிக நல்லது. அதையும்விட முருங்கை பூ உடன் தேன் கலந்து உண்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இன்று எல்லாப் பகுதிகளிலும் முருங்கை மரங்கள் ஏராளம். அப்படி முருங்கை தோப்பில் சேகரிக்கப்படும் சுத்தமான முருங்கை பூ தேன் இப்போது சந்தையில் கிடைக்கிறது.
நமது இயல்பான வாழ்க்கை முறையில் உணவுபழக்கம் எவ்வாறாக இருந்தாலும் தினமும் ஒரு கரண்டி இந்த முருங்கை பு+ தேன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்ல பலனை தரும்.

அனைத்திற்கும் ஒரே மருந்து !! முருங்கை பூ உடன் தேன்
Reviewed by Bright Zoom
on
July 30, 2019
Rating:
No comments: