பொதுத்தமிழ் - சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்!! Bright TNPSC Tamil



பொதுத்தமிழ் - சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்!!

Bright TNPSC Tamil

🌷 இயற்பெயர் - கனகசவுந்தரி

🌷 பிறந்த ஊர் - விருதுநகர்

🌷 பெற்றோர் பெயர் - வே. சங்கரலிங்கம் - சிவகாமி அம்மாள்

🌷 சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், நாடக ஆசிரியர், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர், பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர்.

🌷 பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் கனகசவுந்தரி என்பது ஆகும்.

🌷 இவர் சென்னையின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

🌷 இவர் பின்னாளில் இந்திய ஒன்றிய அரசின் வருமானவரித் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றினார்.

🌷 தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் தமிழ் கற்றவர்.

🌷 புது தில்லியில் திருப்பதி தேவஸ்தானம் நடத்திய திருவேங்கடன் கல்லு}ரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

எழுத்துப் பணி:

🌷 மணிமேகலை காப்பியத்தை ஆய்வு செய்து 'வாடா மலர்" என்ற கட்டுரை எழுதினார். இது அவ்வாண்டிற்கான சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான பரிசு பெற்றது

🌷 நாராயண துரைக்கண்ணன் ஆசிரியராகப் பணியாற்றிய 'ஆனந்த போதினி" என்ற இதழில் இலக்கிய கட்டுரைகள் எழுதினார்.

🌷 'மனித வீறு" என்ற இதழை வெளியிட்டார்.

🌷 'அறிவியக்கப் பேரவையின்" வீரநடை என்னும் இதழுக்கு ஆசிரியராக பணியாற்றினார்.

சிறந்த நூல்கள்:

💥 பண்பாட்டின் சிகரங்கள்

💥 சாலை இளந்திரையன் நினைவுகள்

💥 புதிய தடங்கள்(நாடகம்)

💥 சாலையாறின் பிளிறல்கள்

💥 படுகுழி(நாடகம்)

💥 எந்திரக் கலப்பை(நாடகம்)





பொதுத்தமிழ் - சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்!! Bright TNPSC Tamil பொதுத்தமிழ் - சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்!!    Bright TNPSC Tamil Reviewed by Bright Zoom on July 30, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.