வளையாபதி மற்றும் குண்டலகேசி தொடர்பான செய்திகள்!!
Bright Zoom TNPSC Tamil
வளையாபதி
💐 தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நு}ல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி.
💐 ஒன்பதாம் நு}ற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நு}ல்.
💐 இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை.
💐 இந்நு}ல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை.
💐 இந்நு}லுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப்பட்டுள்ளன.
💐 இதன் பாவகை விருத்தப்பாவால் ஆனது.
💐 இந்நு}லின் மூல நு}ல் வைசிகபுராணம் (35 வது சருக்கம்)
💐 ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் என்று தங்கப்பரணியின் உரை ஆசிரியர் கூறுகிறார்.
குண்டலகேசி
💐 தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நு}ல் ஒரு பௌத்தம் சார்ந்த நு}லாகும்.
💐 பல்வேறு தமிழ் நு}ல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள்.
💐 பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
💐 குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் 10-ஆம் நு}ற்றாண்டு.
💐 தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக்காப்பியத்தின் கருப்பொருளாகும்.
💐 இதன் வேறு பெயர்கள் - அகலகவி, குண்டலகேசி விருத்தம்.
💐 குண்டலகேசியின் வரலாற்றைக் கூறும் நு}ல் நீலகேசி ஆகும்.
💐 குண்டலகேசியின் இயற்பெயர் பத்திரை.
வளையாபதி மற்றும் குண்டலகேசி தொடர்பான செய்திகள்!! Bright Zoom TNPSC Tamil
Reviewed by Bright Zoom
on
July 31, 2019
Rating:
No comments: