TNPSC பொதுத்தமிழ் - இலக்கியம்
அகப்பொருள் பற்றிய குறிப்புகள்!!!
அகப்பொருள்
Bright Zoom
💥அன்புடைய தலைவன், தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும்.
💥குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைகள் ஏழுவகைப்படும்.
💥இவற்றுள் முதல் ஐந்தும் "அன்பின் ஐந்திணை" என்று வழங்கப்படும்.
💥அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள்கள், கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் என்பனவாகும்.
முதற்பொருள்
💥அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும். இவ்வகையான நிலங்கள் ஐவகைப்படும்.
ஐவகை நிலங்கள்
💠குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
💠முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
💠மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
💠நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
💠பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும்
எளிதில் நினைவில் கொள்ள:
💠குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் (குறிஞ்சிப்பூமலையில் பூக்கும்)
💠முல்லை - காடும் காடு சார்ந்த இடமும் (முல்லைப்பூ காட்டில் மலரும்)
💠மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும் (மருதன் வயலை உழுதான்)
💠நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்(நெய்மீன் கடலில் இருந்து பெறப்படுகிறது)
💠பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும் (மணல் நிறைந்த பகுதி பாலை)
💥பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
பெரும் பொழுது
💠கார்காலம் - ஆவணி, புரட்டாசி
💠குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
💠முன்பனிக்காலம் - மார்கழி, தை
💠பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
💠இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
💠முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
எளிதில் நினைவில் கொள்க:
💥ஆவணி மாதத்தில் கார்ல போகிறப்போது குளிர் ஏற்பட்டு முன்னாடியும், பின்னாடியும் இருந்த இளையவர்களையும், முதியவர்களையும் இடம் மாற்றி விட்டார்கள்.
💠கார்ல - கார்காலம்
💠குளிர் - குளிர்காலம்
💠முன்னாடியும் - முன்பனிக்காலம்
💠பின்னாடி - பின்பனிக்காலம்
💠இளையவர்களையும் - இளவேனிற்காலம்
💠முதியவர்களையும் - முதுவேனிற்காலம்
💥மாதங்களை ஆவணி மாதத்திலிருந்து இரண்டு இரண்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அகப்பொருள் பற்றிய குறிப்புகள்!!!
அகப்பொருள்
Bright Zoom
💥அன்புடைய தலைவன், தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும்.
💥குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைகள் ஏழுவகைப்படும்.
💥இவற்றுள் முதல் ஐந்தும் "அன்பின் ஐந்திணை" என்று வழங்கப்படும்.
💥அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள்கள், கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் என்பனவாகும்.
முதற்பொருள்
💥அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும். இவ்வகையான நிலங்கள் ஐவகைப்படும்.
ஐவகை நிலங்கள்
💠குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
💠முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
💠மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
💠நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
💠பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும்
எளிதில் நினைவில் கொள்ள:
💠குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் (குறிஞ்சிப்பூமலையில் பூக்கும்)
💠முல்லை - காடும் காடு சார்ந்த இடமும் (முல்லைப்பூ காட்டில் மலரும்)
💠மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும் (மருதன் வயலை உழுதான்)
💠நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்(நெய்மீன் கடலில் இருந்து பெறப்படுகிறது)
💠பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும் (மணல் நிறைந்த பகுதி பாலை)
💥பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
பெரும் பொழுது
💠கார்காலம் - ஆவணி, புரட்டாசி
💠குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
💠முன்பனிக்காலம் - மார்கழி, தை
💠பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
💠இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
💠முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
எளிதில் நினைவில் கொள்க:
💥ஆவணி மாதத்தில் கார்ல போகிறப்போது குளிர் ஏற்பட்டு முன்னாடியும், பின்னாடியும் இருந்த இளையவர்களையும், முதியவர்களையும் இடம் மாற்றி விட்டார்கள்.
💠கார்ல - கார்காலம்
💠குளிர் - குளிர்காலம்
💠முன்னாடியும் - முன்பனிக்காலம்
💠பின்னாடி - பின்பனிக்காலம்
💠இளையவர்களையும் - இளவேனிற்காலம்
💠முதியவர்களையும் - முதுவேனிற்காலம்
💥மாதங்களை ஆவணி மாதத்திலிருந்து இரண்டு இரண்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
TNPSC பொதுத்தமிழ் - இலக்கியம் அகப்பொருள் பற்றிய குறிப்புகள்!!!
Reviewed by Bright Zoom
on
August 26, 2019
Rating:
No comments: