TNPSC பொது அறிவு - வரலாறு - மராத்தியர்கள்...!
Bright Zoom GK
⭐ தக்காணம் மற்றும் மஹாராஷ்டிரா மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் 'மராத்தியர்கள்" என்று அழைக்கப்பட்டனர். மராத்திய மாநிலத்தின் இயற்கை அமைப்பு அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடையே சிறப்புத் தன்மைகளை உருவாக்கியது.
⭐ 'கொரில்லா" என்ற போர் முறையை மராத்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
⭐ 'கொரில்லா" போர் முறை என்பது 'முறைசாரா போர்முறை" ஆகும். மராத்தியர்கள் மலைகளுக்கிடையெ ஒளிந்து கொண்டு திடீரென்று எதிரிகளை தாக்கும் முறையாகும்.
⭐ பபூனாவிற்கு அருகில் உள்ள சிவனேரி கோட்டையில் கி.பி.1627ஆம் ஆண்டு சிவாஜி பிறந்தார்.
⭐ சிவாஜி தலைமையில் மராத்தியர்கள் வலிமை மிக்கவர்களாகத் தோன்றி முகலாயர்களை எதிர்க்க முனைந்தனர்.
⭐ சிவாஜி பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றி, மராத்திய பேரரசை பலப்படுத்தினார்.
⭐ சிவாஜியை 'மலை எலி" என்றும் 'தக்காண புற்றுநோய்" என்றும் அழைக்கப்பட்டார்.
⭐ கி.பி.1674ஆம் ஆண்டு ரெய்கார் கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது. சிவாஜி 'சத்ரபதி" என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். இந்த முடிசூமுடிசவிழாவின் மூலம் புதிய பேரரசு (மராத்திய பேரரசு) தோன்றியது.
⭐ சிவாஜி ஒரு சிறந்த நிர்வாகி. நிர்வாகத்தில் தனக்கு உதவி செய்ய 8 நபர்களைக் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைத்தார். இது 'அஷ்டப்பிரதான்" என்று அழைக்கப்பட்டது.
1. பீஷ்வா (பிரதம அமைச்சர்)
2. மந்திரி (காலமுறை அமைச்சர்)
3. சச்சிவா (உள்துறை அமைச்சர்)
4. சுமந்த் (வெளியுறவு அமைச்சர்)
5. சேனாதிபதி - (இராணுவ அமைச்சர்)
6. அமத்தியா (நிதி அமைச்சர்)
7. பண்டிட்ராவ் (சமயத் தலைவர்)
8. நியாயதீஷ் (தலைமை நீதிபதி)
⭐ சிவாஜியின் பேரரசு 'சுயராஜ்யம்" என்று அழைக்கப்பட்டது. சிவாஜி ஜமின்தாரி முறையை ஒழித்தார்.
⭐ சிவாஜி ஒரு சிறந்த வீரராகவும், இராணுவத் தளபதியாகவும் விளங்கினார். இவரது இராணுவத்தில் காலாட்படை, குதிரைப் படை, பீரங்கிப் படை, யானைப்படை, ஒட்டகப்படை மற்றும் கப்பற்படை இடம் பெற்றிருந்தன. குதிரைப்படை முக்கிய படைப் பிரிவாக கருதப்பட்டது. இராணுவ முகாமில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. வலிமையான மராத்திய பேரரசை உருவாக்கியது இவரது மாபெரும் சாதனையாகும்.
⭐ மராத்திய பேரரசில் 'பிரதம அமைச்சர்கள்" பீஷ்வாக்கள் என்றழைக்கப்பட்டனர். கி.பி.1713ஆம் ஆண்டு பீஷ்வாக்களின் ஆட்சி தொடங்கியது.
⭐ மராத்திய மன்னர் ஷாகுவின் ஆட்சிக்குப்பின் முதல் பீஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத் பொறுப்பேற்றார். இவர் பீஷ்வா பதவியை பரம்பரையாக்கினார். சௌத், சர்தேஷ்முகி போன்ற வரிகளை வசு+ல் செய்ய நிலமானிய பிரபுக்களை நியமனம் செய்தார். மராத்திய பேரரசின் பெருமையை மீண்டும் புதுப்பித்தார். கி.பி.1720ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.
⭐ ஆப்கானிய அரசரான அகமதுஷா அப்தாலி வரலாற்றுப் புகழ்மிக்க பானிப்பட் சமவெளியில் கி.பி1761-ல் சதாசிவராவ் தலைமையிலான மராத்தியப் படைகளை சந்தித்தார். இது வரலாற்றில் மூன்றாம் பானிப்பட் போர் என்று அழைக்கப்படுகிறது.
⭐ மராத்தியர்களின் ஆக்கிரமிப்புக் கொள்கை மற்றும் கொள்ளையடித்தல் கொள்கை தோல்விக்கு வழிவகுத்தது.
Bright Zoom GK
⭐ தக்காணம் மற்றும் மஹாராஷ்டிரா மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் 'மராத்தியர்கள்" என்று அழைக்கப்பட்டனர். மராத்திய மாநிலத்தின் இயற்கை அமைப்பு அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடையே சிறப்புத் தன்மைகளை உருவாக்கியது.
⭐ 'கொரில்லா" என்ற போர் முறையை மராத்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
⭐ 'கொரில்லா" போர் முறை என்பது 'முறைசாரா போர்முறை" ஆகும். மராத்தியர்கள் மலைகளுக்கிடையெ ஒளிந்து கொண்டு திடீரென்று எதிரிகளை தாக்கும் முறையாகும்.
⭐ பபூனாவிற்கு அருகில் உள்ள சிவனேரி கோட்டையில் கி.பி.1627ஆம் ஆண்டு சிவாஜி பிறந்தார்.
⭐ சிவாஜி தலைமையில் மராத்தியர்கள் வலிமை மிக்கவர்களாகத் தோன்றி முகலாயர்களை எதிர்க்க முனைந்தனர்.
⭐ சிவாஜி பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றி, மராத்திய பேரரசை பலப்படுத்தினார்.
⭐ சிவாஜியை 'மலை எலி" என்றும் 'தக்காண புற்றுநோய்" என்றும் அழைக்கப்பட்டார்.
⭐ கி.பி.1674ஆம் ஆண்டு ரெய்கார் கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது. சிவாஜி 'சத்ரபதி" என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். இந்த முடிசூமுடிசவிழாவின் மூலம் புதிய பேரரசு (மராத்திய பேரரசு) தோன்றியது.
⭐ சிவாஜி ஒரு சிறந்த நிர்வாகி. நிர்வாகத்தில் தனக்கு உதவி செய்ய 8 நபர்களைக் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைத்தார். இது 'அஷ்டப்பிரதான்" என்று அழைக்கப்பட்டது.
1. பீஷ்வா (பிரதம அமைச்சர்)
2. மந்திரி (காலமுறை அமைச்சர்)
3. சச்சிவா (உள்துறை அமைச்சர்)
4. சுமந்த் (வெளியுறவு அமைச்சர்)
5. சேனாதிபதி - (இராணுவ அமைச்சர்)
6. அமத்தியா (நிதி அமைச்சர்)
7. பண்டிட்ராவ் (சமயத் தலைவர்)
8. நியாயதீஷ் (தலைமை நீதிபதி)
⭐ சிவாஜியின் பேரரசு 'சுயராஜ்யம்" என்று அழைக்கப்பட்டது. சிவாஜி ஜமின்தாரி முறையை ஒழித்தார்.
⭐ சிவாஜி ஒரு சிறந்த வீரராகவும், இராணுவத் தளபதியாகவும் விளங்கினார். இவரது இராணுவத்தில் காலாட்படை, குதிரைப் படை, பீரங்கிப் படை, யானைப்படை, ஒட்டகப்படை மற்றும் கப்பற்படை இடம் பெற்றிருந்தன. குதிரைப்படை முக்கிய படைப் பிரிவாக கருதப்பட்டது. இராணுவ முகாமில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. வலிமையான மராத்திய பேரரசை உருவாக்கியது இவரது மாபெரும் சாதனையாகும்.
⭐ மராத்திய பேரரசில் 'பிரதம அமைச்சர்கள்" பீஷ்வாக்கள் என்றழைக்கப்பட்டனர். கி.பி.1713ஆம் ஆண்டு பீஷ்வாக்களின் ஆட்சி தொடங்கியது.
⭐ மராத்திய மன்னர் ஷாகுவின் ஆட்சிக்குப்பின் முதல் பீஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத் பொறுப்பேற்றார். இவர் பீஷ்வா பதவியை பரம்பரையாக்கினார். சௌத், சர்தேஷ்முகி போன்ற வரிகளை வசு+ல் செய்ய நிலமானிய பிரபுக்களை நியமனம் செய்தார். மராத்திய பேரரசின் பெருமையை மீண்டும் புதுப்பித்தார். கி.பி.1720ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.
⭐ ஆப்கானிய அரசரான அகமதுஷா அப்தாலி வரலாற்றுப் புகழ்மிக்க பானிப்பட் சமவெளியில் கி.பி1761-ல் சதாசிவராவ் தலைமையிலான மராத்தியப் படைகளை சந்தித்தார். இது வரலாற்றில் மூன்றாம் பானிப்பட் போர் என்று அழைக்கப்படுகிறது.
⭐ மராத்தியர்களின் ஆக்கிரமிப்புக் கொள்கை மற்றும் கொள்ளையடித்தல் கொள்கை தோல்விக்கு வழிவகுத்தது.
TNPSC பொது அறிவு - வரலாறு - மராத்தியர்கள்...!
Reviewed by Bright Zoom
on
August 30, 2019
Rating:

No comments: