Bright Zoom Today News
அக்டோபர் 10
காலை நேரச் செய்திகள்
முடிவுக்கு வந்தது இலவச அழைப்பு... ஜியோ திடீர் அதிரடி - செய்திகள் !
உலகச் செய்திகள்
அதிபர் சிறிசேனா ஆதரவு :
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ரிசர்வ் வங்கி நிறுத்தி வைப்பு :
வங்கி சாரா நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் ஆகியவற்றின் இணைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.
புதுமையான திட்டம் :
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் உணவு கொடுக்கும் கார்பேஜ் கேஃப் என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26ம் தேதி விடுமுறை :
தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான சனிக்கிழமை விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 26ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் :
தென்மேற்கு பருவக்காற்று ராஜஸ்தானில் இருந்து விலகத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அக்டோபர் 20-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு :
மாவட்ட கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி நிமிடத்திற்கு 6 காசுகள் :
ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் அழைப்பு கட்டணமாக இனி நிமிடத்திற்கு 6 காசுகளை நிர்ணயித்து ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
போக்குவரத்து மாற்றம் :
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னையில் முக்கிய சாலைகளில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி திட்டம் :
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் முதல்முறையாக 500 இ-சைக்கிள்களை இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கலந்துக்கொள்ள தடை :
இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரன் ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு தடகளப் போட்டிகளில் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி :
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
புரோ வாலிபால் லீக் :
புரோ வாலிபால் லீக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி அகமதாபாத், ஐதராபாத், கொச்சி ஆகிய 3 நகரங்களில் போட்டி அரங்கேறுகிறது.
இன்று தொடக்கம் :
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் இன்று தொடங்கவுள்ளன.
அக்டோபர் 10
காலை நேரச் செய்திகள்
முடிவுக்கு வந்தது இலவச அழைப்பு... ஜியோ திடீர் அதிரடி - செய்திகள் !
உலகச் செய்திகள்
அதிபர் சிறிசேனா ஆதரவு :
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ரிசர்வ் வங்கி நிறுத்தி வைப்பு :
வங்கி சாரா நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் ஆகியவற்றின் இணைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.
புதுமையான திட்டம் :
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் உணவு கொடுக்கும் கார்பேஜ் கேஃப் என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26ம் தேதி விடுமுறை :
தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான சனிக்கிழமை விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 26ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் :
தென்மேற்கு பருவக்காற்று ராஜஸ்தானில் இருந்து விலகத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அக்டோபர் 20-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு :
மாவட்ட கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி நிமிடத்திற்கு 6 காசுகள் :
ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் அழைப்பு கட்டணமாக இனி நிமிடத்திற்கு 6 காசுகளை நிர்ணயித்து ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
போக்குவரத்து மாற்றம் :
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னையில் முக்கிய சாலைகளில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி திட்டம் :
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் முதல்முறையாக 500 இ-சைக்கிள்களை இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கலந்துக்கொள்ள தடை :
இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரன் ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு தடகளப் போட்டிகளில் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி :
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
புரோ வாலிபால் லீக் :
புரோ வாலிபால் லீக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி அகமதாபாத், ஐதராபாத், கொச்சி ஆகிய 3 நகரங்களில் போட்டி அரங்கேறுகிறது.
இன்று தொடக்கம் :
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் இன்று தொடங்கவுள்ளன.
Bright Zoom Today News அக்டோபர் 10 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
October 10, 2019
Rating:

No comments: