உலக வரலாற்றில் இன்று.. (25-4-20) இன்றைய நாள் யாரை சிறப்பிக்கிறது?

Bright Zoom Today

உலக வரலாற்றில் இன்று.. (25-4-20)
இன்றைய நாள் யாரை சிறப்பிக்கிறது?


ஏப்ரல் 25 (April 25) கிரிகோரியன் ஆண்டின் 115 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 116 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன.

உலக மலேரியா தினம்

🐝 உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

 ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். 

🐝 ஆகவே, இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டிலிருந்து கடைபிடித்து வருகிறது.

புதுமைப்பித்தன்

✍ நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

✍ எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிப்பெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

✍ இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனை, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்ன கரம், இது மிஷின் யுகம், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒருநாள் கழிந்தது, சிற்பியின் நரகம், செல்லம்மாள் ஆகியவையாகும்.

✍ இவர் சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைப்பெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 1948ஆம் ஆண்டு மறைந்தார்.

மார்க்கோனி

📻 வானொலியின் தந்தை மற்றும் நோபல் பரிசு பெற்ற குக்லீல்மோ மார்க்கோனி 1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார்.

📻 இவருக்கு இயற்பியலில் குறிப்பாக மின்சாரவியலில் ஆர்வம் பிறந்து, கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார்.

📻 1895ஆம் ஆண்டு திசை திரும்பும் மின்கம்பம் (னுசைநஉவழையெட யுவெநnயெ) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு செய்தியை அனுப்பினார். 1897ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது. 

📻 ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 1901ஆம் ஆண்டு 2100கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.

📻 மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

📻 மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுப்போக்கு சாதனத்தை வழங்கிய மார்க்கோனி 1937ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

👉 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் மறைந்தார்.

உலக வரலாற்றில் இன்று.. (25-4-20) இன்றைய நாள் யாரை சிறப்பிக்கிறது? உலக வரலாற்றில் இன்று.. (25-4-20) இன்றைய நாள் யாரை சிறப்பிக்கிறது? Reviewed by Bright Zoom on April 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.