Bright Zoom Today
மே 14 காலை நேரச் செய்திகள்
4 மாதங்களுக்கு... கால அவகாசம் நீட்டிப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
ஒருங்கிணைந்த நடவடிக்கை :
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சீனா விளக்கம் :
இந்தியா - சீன எல்லைப் பகுதியில், இருநாட்டு படைகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், வழக்கமான ரோந்துப் பணியில் தான் தங்கள் படையினர் ஈடுபட்டுள்ளதாக, சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
3 லட்சம் கோடி கடன் :
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் 3 லட்சம் கோடி கடன் வழங்குவது உட்பட, பல்வேறு பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
4 மாதங்களுக்கு... :
2019 - 2020ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு :
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை ரத்து :
பயணிகள் ரயில்களின் இயக்கம் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று திறப்பு :
வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது.
பொது நுழைவுத்தேர்வு :
இன்ஜினீயரிங் உட்பட தொழிற்படிப்புகளுக்கு ஜூலை 30ஆம் தேதி மற்றும் 31ஆம் தேதிகளில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை பெற ஆணை :
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள், ஆதார் எண்ணை காட்டி, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற ஆணையிடப்பட்டு உள்ளது என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நஷ்டம் ஏற்படுவதை தடுக்க புதிய திட்டம் :
தெலுங்கானாவில் விவசாயிகள் இனி எப்போது, எந்த பயிர் பயிரிட வேண்டும்? என்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்பு :
மே 17ஆம் தேதிக்கு பின் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்புள்ளதால், திருப்பதி கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மாவட்டச் செய்திகள்
முட்டை கொள்முதல் விலை உயர்வு :
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.35ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கேப்டனாக பாபர் அசாம் நியமனம் :
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மே 14 காலை நேரச் செய்திகள்
4 மாதங்களுக்கு... கால அவகாசம் நீட்டிப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
ஒருங்கிணைந்த நடவடிக்கை :
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சீனா விளக்கம் :
இந்தியா - சீன எல்லைப் பகுதியில், இருநாட்டு படைகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், வழக்கமான ரோந்துப் பணியில் தான் தங்கள் படையினர் ஈடுபட்டுள்ளதாக, சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
3 லட்சம் கோடி கடன் :
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் 3 லட்சம் கோடி கடன் வழங்குவது உட்பட, பல்வேறு பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
4 மாதங்களுக்கு... :
2019 - 2020ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு :
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை ரத்து :
பயணிகள் ரயில்களின் இயக்கம் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று திறப்பு :
வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது.
பொது நுழைவுத்தேர்வு :
இன்ஜினீயரிங் உட்பட தொழிற்படிப்புகளுக்கு ஜூலை 30ஆம் தேதி மற்றும் 31ஆம் தேதிகளில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை பெற ஆணை :
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள், ஆதார் எண்ணை காட்டி, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற ஆணையிடப்பட்டு உள்ளது என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நஷ்டம் ஏற்படுவதை தடுக்க புதிய திட்டம் :
தெலுங்கானாவில் விவசாயிகள் இனி எப்போது, எந்த பயிர் பயிரிட வேண்டும்? என்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்பு :
மே 17ஆம் தேதிக்கு பின் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்புள்ளதால், திருப்பதி கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மாவட்டச் செய்திகள்
முட்டை கொள்முதல் விலை உயர்வு :
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.35ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கேப்டனாக பாபர் அசாம் நியமனம் :
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Bright Zoom Today மே 14 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 14, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 14, 2020
Rating:


No comments: