Bright Zoom Today News
மே 08 மாலை நேரச் செய்திகள்
தமிழக முதல்வர் உத்தரவு - மாலைச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ஈரானில் நிலநடுக்கம் :
இன்று அதிகாலை ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், 22 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
அதிகாரிகளுடன் ஆலோசனை :
காய்கறி மொத்த விற்பனைச் சந்தை அமைக்க திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் உத்தரவு :
தமிழகத்தில் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு :
விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட பாதிப்புக்கு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை உடனடியாக செலுத்தும்படி எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் :
தொழிலாளர் சட்டத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2 சிறப்பு விமானங்கள்... :
அபுதாபி மற்றும் துபாயில் இருந்து இந்தியர்கள் 363 பேரை அழைத்துக் கொண்டு, 2 சிறப்பு விமானங்கள் கேரளாவிற்கு இன்று வந்தடைந்தன.
மகாராஷ்டிரா அரசு முடிவு :
கல்லூரி மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
புதிய தீவிரவாத குழு :
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத செயல்களை நடத்துவது பாகிஸ்தானின் புதிய பயங்கரவாத குழுவான வுhந சுநளளைவயnஉந குசழவெ என தெரிய வந்துள்ளது.
யோகி ஆதித்யநாத் உத்தரவு :
தொழிலாளர்கள் யாரும் நடந்து வரக்கூடாது என்றும், அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
முதல்வர் அறிவிப்பு :
பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பிசிசிஐ தெரிவிப்பு :
தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மே 08 மாலை நேரச் செய்திகள்
உலகச் செய்திகள்
ஈரானில் நிலநடுக்கம் :
இன்று அதிகாலை ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், 22 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
அதிகாரிகளுடன் ஆலோசனை :
காய்கறி மொத்த விற்பனைச் சந்தை அமைக்க திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் உத்தரவு :
தமிழகத்தில் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு :
விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட பாதிப்புக்கு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை உடனடியாக செலுத்தும்படி எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் :
தொழிலாளர் சட்டத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2 சிறப்பு விமானங்கள்... :
அபுதாபி மற்றும் துபாயில் இருந்து இந்தியர்கள் 363 பேரை அழைத்துக் கொண்டு, 2 சிறப்பு விமானங்கள் கேரளாவிற்கு இன்று வந்தடைந்தன.
மகாராஷ்டிரா அரசு முடிவு :
கல்லூரி மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
புதிய தீவிரவாத குழு :
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத செயல்களை நடத்துவது பாகிஸ்தானின் புதிய பயங்கரவாத குழுவான வுhந சுநளளைவயnஉந குசழவெ என தெரிய வந்துள்ளது.
யோகி ஆதித்யநாத் உத்தரவு :
தொழிலாளர்கள் யாரும் நடந்து வரக்கூடாது என்றும், அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
முதல்வர் அறிவிப்பு :
பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பிசிசிஐ தெரிவிப்பு :
தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Bright Zoom Today News மே 08 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 08, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 08, 2020
Rating:


No comments: