Bright Zoom Today News
மே 09 மாலை நேரச் செய்திகள்
திங்கட்கிழமை முதல்.. தமிழகம் முழுவதும் நீட்டிப்பு... - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
கிரீன் கார்டு விரைவில் :
அமெரிக்காவில் H-1B அல்லது J2 விசாவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு விரைவில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
உயர்நிலைக்குழு அமைப்பு :
தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு :
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் காய்கறிகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும், தேநீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில்... :
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கல் :
கர்நாடக மாநிலம் பெங்க;ருவில் உணவு விடுதிகள், பார்கள், மதுக்கடைகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்களை அங்கேயே அருந்த அனுமதியில்லை, எடுத்து சென்று அருந்தலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி துவங்கியது :
தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளிலும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.
அரசாணை பிறப்பிப்பு :
வெளி மாநிலத்தவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான செலவை தொடர்புடைய மாநில அரசுகள் ஏற்காவிட்டால் தமிழக அரசே ஏற்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஆவின் நிறுவனம் :
வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
ரயில்வே துறை சாதனை :
சேலம்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் 158 ஆண்டுகள் பழமையான பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, 36 மணி நேரத்தில் புதிய பாலத்தை ரயில்வே துறை கட்டி சாதனை படைத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
2 அணிகள் :
2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.
மே 09 மாலை நேரச் செய்திகள்
திங்கட்கிழமை முதல்.. தமிழகம் முழுவதும் நீட்டிப்பு... - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
கிரீன் கார்டு விரைவில் :
அமெரிக்காவில் H-1B அல்லது J2 விசாவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு விரைவில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
உயர்நிலைக்குழு அமைப்பு :
தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு :
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் காய்கறிகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும், தேநீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில்... :
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கல் :
கர்நாடக மாநிலம் பெங்க;ருவில் உணவு விடுதிகள், பார்கள், மதுக்கடைகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்களை அங்கேயே அருந்த அனுமதியில்லை, எடுத்து சென்று அருந்தலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி துவங்கியது :
தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளிலும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.
அரசாணை பிறப்பிப்பு :
வெளி மாநிலத்தவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான செலவை தொடர்புடைய மாநில அரசுகள் ஏற்காவிட்டால் தமிழக அரசே ஏற்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஆவின் நிறுவனம் :
வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
ரயில்வே துறை சாதனை :
சேலம்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் 158 ஆண்டுகள் பழமையான பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, 36 மணி நேரத்தில் புதிய பாலத்தை ரயில்வே துறை கட்டி சாதனை படைத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
2 அணிகள் :
2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.
Bright Zoom Today News மே 09 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 09, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 09, 2020
Rating:


No comments: