Bright Zoom Today News
மே 21 மாலை நேரச் செய்திகள்
நிபந்தனைகளுடன்... நாளை முதல் அனுமதி... தமிழக முதல்வர் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
புதிய வசதி வெளியீடு :
ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iழுளு 13.5ல் பயனாளர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
அனல் காற்று வீசும் :
ஆம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அனுமதி :
சின்னத்திரையினர் நாளை முதல் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
நாடு ஒற்றுமையுடன் நிற்கும் :
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை துடைக்க நாடு ஒற்றுமையுடன் நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
50 சதவிகிதம் தள்ளுபடி :
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
அரசின் கட்டுப்பாடு இருக்கும் :
வரும் 25ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விமானக் கட்டணங்களை நிச்சயிப்பதில், அரசின் கட்டுப்பாடு இருக்கும் என கூறப்படுகிறது.
4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு :
ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திலேயே, 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்கள் ஆணையம் அறிவிப்பு :
விமான பயணம் செய்வோர் செல்போன்களில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டுமென்று விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் இயக்கம்... :
ஆந்திராவிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்து பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு :
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மூன்று மடங்கு உயர்வு :
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மின் உற்பத்தி நிறுத்தம் :
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அணு உலையில் ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் நிறுத்தம் :
சத்தியமங்கலத்தில் பட்டு சேலைகள் தேக்கத்தால், கைத்தறி உற்பத்தி நாளை முதல் நிறுத்தப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் போட்டி நடத்தப்பட வாய்ப்பு :
இந்தியாவில் மழைக்காலத்திற்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
மே 21 மாலை நேரச் செய்திகள்
நிபந்தனைகளுடன்... நாளை முதல் அனுமதி... தமிழக முதல்வர் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
புதிய வசதி வெளியீடு :
ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iழுளு 13.5ல் பயனாளர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
அனல் காற்று வீசும் :
ஆம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அனுமதி :
சின்னத்திரையினர் நாளை முதல் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
நாடு ஒற்றுமையுடன் நிற்கும் :
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை துடைக்க நாடு ஒற்றுமையுடன் நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
50 சதவிகிதம் தள்ளுபடி :
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
அரசின் கட்டுப்பாடு இருக்கும் :
வரும் 25ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விமானக் கட்டணங்களை நிச்சயிப்பதில், அரசின் கட்டுப்பாடு இருக்கும் என கூறப்படுகிறது.
4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு :
ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திலேயே, 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்கள் ஆணையம் அறிவிப்பு :
விமான பயணம் செய்வோர் செல்போன்களில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டுமென்று விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் இயக்கம்... :
ஆந்திராவிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்து பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு :
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மூன்று மடங்கு உயர்வு :
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மின் உற்பத்தி நிறுத்தம் :
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அணு உலையில் ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் நிறுத்தம் :
சத்தியமங்கலத்தில் பட்டு சேலைகள் தேக்கத்தால், கைத்தறி உற்பத்தி நாளை முதல் நிறுத்தப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் போட்டி நடத்தப்பட வாய்ப்பு :
இந்தியாவில் மழைக்காலத்திற்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
Bright Zoom Today News மே 21 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 21, 2020
Rating:

No comments: