Bright Zoom Today News
மே 22 காலை நேரச் செய்திகள்
இரண்டு நாட்களுக்கு அனல் காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் :
ஈரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
யுஜிசி ஒப்புதல் :
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு :
இரண்டு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்க உள்ள உள்நாட்டு விமான சேவைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை :
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசு அவசர சட்டம் :
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
ஜல் சக்தித்துறை அறிவிப்பு :
காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஜல் சக்தித்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் :
ஜூன் 1ஆம் தேதி முதல் பெங்க;ரு-மும்பை எக்ஸ்பிரஸ் உட்பட 14 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் தெரிவிப்பு :
மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கடன்தொகையை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிஜிபி திரிபாதி உத்தரவு :
தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று முக்கிய ஆலோசனை :
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு :
ராணுவ தளவாட உதிரிபாகங்கள், சாதனங்கள் என 26 வகையான பொருட்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அபியாஸ் செயலி அறிமுகம் :
நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் இலவச உயர்தர பயிற்சி மேற்கொள்ள அபியாஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஷூட்டிங் நடத்த அனுமதி :
ஆந்திர மாநிலத்தில் சினிமா, டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு வசதி :
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் வசதி இன்று தொடங்குகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ரத்து செய்யப்படும் :
அடுத்த ஆண்டிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், போட்டி ரத்து செய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் கூறியுள்ளார்.
மே 22 காலை நேரச் செய்திகள்
இரண்டு நாட்களுக்கு அனல் காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் :
ஈரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
யுஜிசி ஒப்புதல் :
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு :
இரண்டு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்க உள்ள உள்நாட்டு விமான சேவைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை :
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசு அவசர சட்டம் :
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
ஜல் சக்தித்துறை அறிவிப்பு :
காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஜல் சக்தித்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் :
ஜூன் 1ஆம் தேதி முதல் பெங்க;ரு-மும்பை எக்ஸ்பிரஸ் உட்பட 14 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் தெரிவிப்பு :
மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கடன்தொகையை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிஜிபி திரிபாதி உத்தரவு :
தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று முக்கிய ஆலோசனை :
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு :
ராணுவ தளவாட உதிரிபாகங்கள், சாதனங்கள் என 26 வகையான பொருட்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அபியாஸ் செயலி அறிமுகம் :
நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் இலவச உயர்தர பயிற்சி மேற்கொள்ள அபியாஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஷூட்டிங் நடத்த அனுமதி :
ஆந்திர மாநிலத்தில் சினிமா, டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு வசதி :
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் வசதி இன்று தொடங்குகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ரத்து செய்யப்படும் :
அடுத்த ஆண்டிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், போட்டி ரத்து செய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் கூறியுள்ளார்.
Bright Zoom Today News மே 22 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 22, 2020
Rating:

No comments: