Bright Zoom Today News
மே 22 மாலை நேரச் செய்திகள்
சென்னையை தவிர... ஆட்டோக்கள் இயங்க அனுமதி... தமிழக அரசு - மாலைச் செய்திகள் !
உலகச் செய்திகள்
சில ஆண்டுகளுக்கு... :
பேஸ்புக் ஊழியர்களில் பாதி பேர் அடுத்த சில ஆண்டுகளுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றக்கூடும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ஆட்டோக்களை இயக்க அனுமதி :
சென்னையை தவிர்த்து, தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை :
தபால் நிலையங்களில் 15 நாடுகளுக்கு சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பயங்கர தீ விபத்து :
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் 3 மாதங்களுக்கு... :
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 விழுக்காடு குறைத்து, நான்கு விழுக்காடாக ஆக்கியுள்ளது. கடன்களுக்கான இஎம்ஐ எனப்படும் தவணைகள் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று பதவியேற்றார்... :
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று பதவியேற்று கொண்டார்.
தமிழக அரசு உத்தரவு :
குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ.1,000 கோடி நிதியுதவி :
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஒடிசா சென்றடைந்தார்... பிரதமர் மோடி :
மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்துள்ளார்.
முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா :
இந்தியாவில் மே 25ஆம் தேதி தொடங்கவுள்ள உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியது.
தமிழக அரசு வேண்டுகோள் :
மே 31ஆம் தேதி வரை தமிழகத்தில் விமான சேவையை துவங்க வேண்டாம் என மத்திய அரசிற்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விரைவில் முதல்வர் ஆலோசனை :
தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தருவது பற்றி விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
நாளை முதல்... :
நாளை முதல் திருவள்;ர் மேற்கு மற்றும் காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவிப்பு :
இங்கிலாந்து தொடருக்காக 25 பேர் கொண்ட அணியை தயார் செய்ய இருக்கின்றோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
வரும் 1ஆம் தேதி :
வேகப்பந்து வீச்சாளர்களுடன் வரும் 1ஆம் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
மே 22 மாலை நேரச் செய்திகள்
சென்னையை தவிர... ஆட்டோக்கள் இயங்க அனுமதி... தமிழக அரசு - மாலைச் செய்திகள் !
உலகச் செய்திகள்
சில ஆண்டுகளுக்கு... :
பேஸ்புக் ஊழியர்களில் பாதி பேர் அடுத்த சில ஆண்டுகளுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றக்கூடும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ஆட்டோக்களை இயக்க அனுமதி :
சென்னையை தவிர்த்து, தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை :
தபால் நிலையங்களில் 15 நாடுகளுக்கு சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பயங்கர தீ விபத்து :
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் 3 மாதங்களுக்கு... :
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 விழுக்காடு குறைத்து, நான்கு விழுக்காடாக ஆக்கியுள்ளது. கடன்களுக்கான இஎம்ஐ எனப்படும் தவணைகள் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று பதவியேற்றார்... :
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று பதவியேற்று கொண்டார்.
தமிழக அரசு உத்தரவு :
குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ.1,000 கோடி நிதியுதவி :
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஒடிசா சென்றடைந்தார்... பிரதமர் மோடி :
மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்துள்ளார்.
முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா :
இந்தியாவில் மே 25ஆம் தேதி தொடங்கவுள்ள உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியது.
தமிழக அரசு வேண்டுகோள் :
மே 31ஆம் தேதி வரை தமிழகத்தில் விமான சேவையை துவங்க வேண்டாம் என மத்திய அரசிற்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விரைவில் முதல்வர் ஆலோசனை :
தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தருவது பற்றி விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
நாளை முதல்... :
நாளை முதல் திருவள்;ர் மேற்கு மற்றும் காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவிப்பு :
இங்கிலாந்து தொடருக்காக 25 பேர் கொண்ட அணியை தயார் செய்ய இருக்கின்றோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
வரும் 1ஆம் தேதி :
வேகப்பந்து வீச்சாளர்களுடன் வரும் 1ஆம் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
Bright Zoom Today News மே 22 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 22, 2020
Rating:

No comments: