Bright Zoom Today News
மே 27 காலை நேரச் செய்திகள்
விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்... மே 29ஆம் தேதி முதல் - செய்திகள் !
உலகச் செய்திகள்
சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது :
அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது, இந்திய அமெரிக்கரான ராஜீவ் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அவசர ஆலோசனை :
சீனாவுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப்படை தலைமை தளபதி, முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத... பொருளாதார மந்தநிலை :
சிங்கப்பூர் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்வதாக அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மே 29ஆம் தேதி முதல் :
ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகத்தில்... :
ஒத்திவைக்கப்பட்ட 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடங்க உள்ளன. 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் 8 இடங்களில்... :
தமிழகத்தில் 8 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, திருத்தணி, திருச்சியில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழக அரசுக்கு கோரிக்கை :
சின்னத்திரை படப்பிடிப்புப் பணிகளில் கூடுதலான எண்ணிக்கையில் பணியாளர்களை அனுமதிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை திட்டம் :
தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் :
ரூ.15,000 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.
மின்வாரியம் அறிவுறுத்தல் :
மின் விபத்துக்களை தடுக்கும் வகையில் வீடுகளில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் இருந்தால் அவற்றை ஆப் செய்துவிட்டு மின் கம்பங்களில் பணியை தொடங்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
2 மாதங்களுக்கு பிறகு :
சென்னையில் இருந்து சேலத்திற்கு 2 மாதங்களுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடங்கியது.
சிலப்பதிகார பூங்கா :
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிலப்பதிகார பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூன் 1ஆம் தேதி எளிமையாக நடக்கவுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பயிற்சியை தொடங்கினர் :
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்.
பிசிசிஐ-யிடம் அனுமதி :
இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா வெளிநாட்டு லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கோர உள்ளார்.
மே 27 காலை நேரச் செய்திகள்
விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்... மே 29ஆம் தேதி முதல் - செய்திகள் !
உலகச் செய்திகள்
சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது :
அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது, இந்திய அமெரிக்கரான ராஜீவ் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அவசர ஆலோசனை :
சீனாவுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப்படை தலைமை தளபதி, முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத... பொருளாதார மந்தநிலை :
சிங்கப்பூர் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்வதாக அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மே 29ஆம் தேதி முதல் :
ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகத்தில்... :
ஒத்திவைக்கப்பட்ட 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடங்க உள்ளன. 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் 8 இடங்களில்... :
தமிழகத்தில் 8 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, திருத்தணி, திருச்சியில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழக அரசுக்கு கோரிக்கை :
சின்னத்திரை படப்பிடிப்புப் பணிகளில் கூடுதலான எண்ணிக்கையில் பணியாளர்களை அனுமதிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை திட்டம் :
தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் :
ரூ.15,000 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.
மின்வாரியம் அறிவுறுத்தல் :
மின் விபத்துக்களை தடுக்கும் வகையில் வீடுகளில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் இருந்தால் அவற்றை ஆப் செய்துவிட்டு மின் கம்பங்களில் பணியை தொடங்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
2 மாதங்களுக்கு பிறகு :
சென்னையில் இருந்து சேலத்திற்கு 2 மாதங்களுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடங்கியது.
சிலப்பதிகார பூங்கா :
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிலப்பதிகார பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூன் 1ஆம் தேதி எளிமையாக நடக்கவுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பயிற்சியை தொடங்கினர் :
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்.
பிசிசிஐ-யிடம் அனுமதி :
இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா வெளிநாட்டு லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கோர உள்ளார்.
Bright Zoom Today News மே 27 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 27, 2020
Rating:

No comments: