Bright Zoom Today News
மே 28 காலை நேரச் செய்திகள்
நாடு முழுவதும் கொண்டாட முடிவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல்... பாகிஸ்தான் பிரதமர் :
இந்தியாவின் விரிவாக்க கொள்கைகள், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிப்பவையாக உள்ளன என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு :
மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நாசா வீரர்களை அனுப்புவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா கடும் கண்டனம் :
புதிய வரைபடத்தில் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததையடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்திவைத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
கேரள கடலோரப் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், அதன் மூலம் தமிழகத்திற்கு மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொண்டாட முடிவு :
இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவியேற்று, வரும் 30ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றுடன் விடைபெறுகிறது :
தமிழ்நாட்டில் கடந்த ஒருமாதமாக மக்களை வாட்டி வதைத்த கத்திரிவெயில் இன்றுடன் விடைபெறுகிறது. எனவே, அடுத்தடுத்த நாட்களில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே துறை தெரிவிப்பு :
நாடு முழுவதும் கடந்த 26 நாட்களில் 3,543 ரயில்கள் மூலம் சுமார் 48 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 15ஆம் தேதி :
தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வரும் ஜூன் 15ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கவுள்ளன.
ரூ.500 அபராதம் :
ஹரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ட்ரோன் உதவியுடன்... பூச்சிக்கொல்லி மருந்து :
ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டச் செய்திகள்
மீண்டும் தொடங்கியது :
சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
விளையாட்டுச் செய்திகள்
அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை :
இந்திய பளுதூக்குதல் வீராங்கனையும், முன்னாள் உலக சாம்பியனுமான மீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியை தொடங்கினர் :
இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கினர்.
மேரிகோம் தெரிவிப்பு :
வயது கூடுவதை பற்றி கவலைப்படவில்லை எனவும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே உறுதி எனவும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார்.
மே 28 காலை நேரச் செய்திகள்
நாடு முழுவதும் கொண்டாட முடிவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல்... பாகிஸ்தான் பிரதமர் :
இந்தியாவின் விரிவாக்க கொள்கைகள், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிப்பவையாக உள்ளன என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு :
மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நாசா வீரர்களை அனுப்புவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா கடும் கண்டனம் :
புதிய வரைபடத்தில் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததையடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்திவைத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
கேரள கடலோரப் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், அதன் மூலம் தமிழகத்திற்கு மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொண்டாட முடிவு :
இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவியேற்று, வரும் 30ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றுடன் விடைபெறுகிறது :
தமிழ்நாட்டில் கடந்த ஒருமாதமாக மக்களை வாட்டி வதைத்த கத்திரிவெயில் இன்றுடன் விடைபெறுகிறது. எனவே, அடுத்தடுத்த நாட்களில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே துறை தெரிவிப்பு :
நாடு முழுவதும் கடந்த 26 நாட்களில் 3,543 ரயில்கள் மூலம் சுமார் 48 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 15ஆம் தேதி :
தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வரும் ஜூன் 15ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கவுள்ளன.
ரூ.500 அபராதம் :
ஹரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ட்ரோன் உதவியுடன்... பூச்சிக்கொல்லி மருந்து :
ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டச் செய்திகள்
மீண்டும் தொடங்கியது :
சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
விளையாட்டுச் செய்திகள்
அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை :
இந்திய பளுதூக்குதல் வீராங்கனையும், முன்னாள் உலக சாம்பியனுமான மீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியை தொடங்கினர் :
இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கினர்.
மேரிகோம் தெரிவிப்பு :
வயது கூடுவதை பற்றி கவலைப்படவில்லை எனவும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே உறுதி எனவும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார்.
Bright Zoom Today News மே 28 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 28, 2020
Rating:

No comments: