Bright Zoom News
ஜுன் 25 காலை நேரச் செய்திகள்
இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல... இ-பாஸ் கட்டாயம் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்கா தெரிவிப்பு:
மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியும், பயங்கரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானின் அரசு பாதுகாப்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவு:
தென்கொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு நியமனம்:
ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ள ஏழைகள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 116 தனி அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழக டிஜிபி உத்தரவு:
விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து:
இன்று (ஜூன் 25) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழகத்தில் இன்று முதல்:
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஓராண்டுக்கு நீட்டிப்பு:
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
புதிதாக 12 மாவட்டங்கள்:
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக 12 மாவட்டங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்:
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
பருவத்தேர்வுகளை ரத்து செய்ய யு.ஜி.சி. திட்டம்:
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதி பருவத்தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி. திட்டமிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தண்ணீர் திறப்பு நிறுத்தம்:
சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறப்பை ஆந்திர பொதுப்பணித்துறை முற்றிலும் நிறுத்தி உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
சி.பி.எல் தொடரில் இருந்து விலகல்:
கரீபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்) டி20 தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
பதவி காலம் முடிவடைகிறது:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பது குறித்து ஐ.சி.சி. இன்று (வியாழக்கிழமை) வீடியோ கான்பரன்ஸ் மூலம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
ஜுன் 25 காலை நேரச் செய்திகள்
உலகச் செய்திகள்
அமெரிக்கா தெரிவிப்பு:
மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியும், பயங்கரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானின் அரசு பாதுகாப்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவு:
தென்கொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு நியமனம்:
ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ள ஏழைகள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 116 தனி அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழக டிஜிபி உத்தரவு:
விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து:
இன்று (ஜூன் 25) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழகத்தில் இன்று முதல்:
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஓராண்டுக்கு நீட்டிப்பு:
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
புதிதாக 12 மாவட்டங்கள்:
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக 12 மாவட்டங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்:
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
பருவத்தேர்வுகளை ரத்து செய்ய யு.ஜி.சி. திட்டம்:
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதி பருவத்தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி. திட்டமிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தண்ணீர் திறப்பு நிறுத்தம்:
சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறப்பை ஆந்திர பொதுப்பணித்துறை முற்றிலும் நிறுத்தி உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
சி.பி.எல் தொடரில் இருந்து விலகல்:
கரீபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்) டி20 தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
பதவி காலம் முடிவடைகிறது:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பது குறித்து ஐ.சி.சி. இன்று (வியாழக்கிழமை) வீடியோ கான்பரன்ஸ் மூலம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
Bright Zoom News ஜுன் 25 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 25, 2020
Rating:

No comments: