Bright Zoom Today News
ஜுன் 23 மாலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இன்று முதல் விமானப் போக்குவரத்து:
அமீரகத்தின் முக்கிய நகரான துபாயில் இன்று முதல் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளும் சில நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசு முடிவு:
இந்த ஆண்டு இறுதி வரை ர்-1டீ மற்றும் இதர வேலை விசாக்களை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், திறமை அடிப்படையிலான விசா குடியேற்ற முறைக்கு மாறுவதாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு விளக்கம்:
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு:
கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை:
இந்தியாவின் மிகப்பெரிய சமயத் திருவிழாக்களில் ஒன்றான பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடைபெற்றது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
அரசு பேருந்துகள் இயக்கப்படாது:
மதுரையில் நாளை முதல் பொதுமுடக்கம் உள்ள பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
4 பேர் சஸ்பெண்ட்:
கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினர் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்:
நாமக்கல் மாவட்டத்தில் கோழி கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்கும் ஆலையை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை:
ஐ.பி.எல் 2020 சீசன் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முடிவு எடுக்கும் என்று ஐ.பி.எல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லா லிகா கால்பந்து போட்டி:
லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
ஜுன் 23 மாலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இன்று முதல் விமானப் போக்குவரத்து:
அமீரகத்தின் முக்கிய நகரான துபாயில் இன்று முதல் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளும் சில நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசு முடிவு:
இந்த ஆண்டு இறுதி வரை ர்-1டீ மற்றும் இதர வேலை விசாக்களை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், திறமை அடிப்படையிலான விசா குடியேற்ற முறைக்கு மாறுவதாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு விளக்கம்:
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு:
கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை:
இந்தியாவின் மிகப்பெரிய சமயத் திருவிழாக்களில் ஒன்றான பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடைபெற்றது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
அரசு பேருந்துகள் இயக்கப்படாது:
மதுரையில் நாளை முதல் பொதுமுடக்கம் உள்ள பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
4 பேர் சஸ்பெண்ட்:
கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினர் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்:
நாமக்கல் மாவட்டத்தில் கோழி கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்கும் ஆலையை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை:
ஐ.பி.எல் 2020 சீசன் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முடிவு எடுக்கும் என்று ஐ.பி.எல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லா லிகா கால்பந்து போட்டி:
லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
Bright Zoom Today News ஜுன் 23 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 23, 2020
Rating:

No comments: