Bright Zoom Today New
ஜுன் 09 காலை நேரச் செய்திகள்
75 நாட்களுக்குப் பின் அனுமதி - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்க ராணுவம் முடிவு:
புதிதாக தயாரிக்கப்பட்ட மின்னணு துப்பாக்கியை சிரியாவில் பயன்படுத்திப் பார்க்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிப்பு:
வேறுபாடுகளை மோதல்களாக்க வேண்டாம் என இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல்:
தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் இன்று முதல் வடகொரியா துண்டித்து கொள்ள முடிவு செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தனியார் அலுவலகங்கள் திறப்பு:
மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) 10 சதவீத ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. தனியார் அலுவலக ஊழியர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன் போன்றவர்களுக்காக பெஸ்ட் பஸ் சேவை தொடங்கப்பட்டது.
ரத்து செய்த துணை நிலை ஆளுநர்:
டெல்லி மருத்துவமனைகள் டெல்லியில் வசிப்பவர்களுக்கே என்பது உள்ளிட்ட டெல்லி அரசின் 2 உத்தரவுகளை துணை நிலை ஆளுநர் ரத்து செய்துள்ளார்.
2 விசேஷ விமானங்கள்:
ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனத்துடன் கூடிய பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதத்துக்குள் ஏர் இந்தியாவிடம் போயிங் நிறுவனம் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும்:
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணி, சிறப்பு பூஜைகளுடன் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். அறிமுகம்:
78 ரூபாய்க்கு 3 ஜி.பி. டேட்டா கிடைக்கும் வகையிலான திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் திறந்து வைத்தார்:
தமிழகத்தில் பல பகுதிகளில் ரூ.265 கோடி செலவில் கட்டப்பட்ட பாலங்கள், சாலை பணிகள், சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மத்திய அரசு உத்தரவு:
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய சுற்றளவை குறைக்கும் திட்டத்தை, தமிழக வனத்துறை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக வனத்துறை விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா போட்டி:
கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா போட்டியிடுவார் என்றும், இன்று (செவ்வாய்க்கிழமை) மனுதாக்கல் செய்வார் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
75 நாட்களுக்குப் பின் அனுமதி:
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 75 நாட்களுக்குப் பின் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு குறையாமல் இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
கௌரவ விருதுக்கு தேர்வு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கௌரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜுன் 09 காலை நேரச் செய்திகள்
75 நாட்களுக்குப் பின் அனுமதி - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்க ராணுவம் முடிவு:
புதிதாக தயாரிக்கப்பட்ட மின்னணு துப்பாக்கியை சிரியாவில் பயன்படுத்திப் பார்க்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிப்பு:
வேறுபாடுகளை மோதல்களாக்க வேண்டாம் என இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல்:
தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் இன்று முதல் வடகொரியா துண்டித்து கொள்ள முடிவு செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தனியார் அலுவலகங்கள் திறப்பு:
மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) 10 சதவீத ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. தனியார் அலுவலக ஊழியர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன் போன்றவர்களுக்காக பெஸ்ட் பஸ் சேவை தொடங்கப்பட்டது.
ரத்து செய்த துணை நிலை ஆளுநர்:
டெல்லி மருத்துவமனைகள் டெல்லியில் வசிப்பவர்களுக்கே என்பது உள்ளிட்ட டெல்லி அரசின் 2 உத்தரவுகளை துணை நிலை ஆளுநர் ரத்து செய்துள்ளார்.
2 விசேஷ விமானங்கள்:
ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனத்துடன் கூடிய பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதத்துக்குள் ஏர் இந்தியாவிடம் போயிங் நிறுவனம் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும்:
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணி, சிறப்பு பூஜைகளுடன் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். அறிமுகம்:
78 ரூபாய்க்கு 3 ஜி.பி. டேட்டா கிடைக்கும் வகையிலான திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் திறந்து வைத்தார்:
தமிழகத்தில் பல பகுதிகளில் ரூ.265 கோடி செலவில் கட்டப்பட்ட பாலங்கள், சாலை பணிகள், சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மத்திய அரசு உத்தரவு:
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய சுற்றளவை குறைக்கும் திட்டத்தை, தமிழக வனத்துறை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக வனத்துறை விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா போட்டி:
கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா போட்டியிடுவார் என்றும், இன்று (செவ்வாய்க்கிழமை) மனுதாக்கல் செய்வார் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
75 நாட்களுக்குப் பின் அனுமதி:
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 75 நாட்களுக்குப் பின் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு குறையாமல் இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
கௌரவ விருதுக்கு தேர்வு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கௌரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Bright Zoom Today New ஜுன் 09 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 09, 2020
Rating:

No comments: