#BrightZoomTodayNews
ஜுன் 10 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக... முதற்கட்ட அறிக்கை தாக்கல் - மாலைச் செய்திகள் !
உலகச் செய்திகள்
நேபாள அரசு மீண்டும் தெரிவிப்பு:
நேபாள அரசு மீண்டும் தெரிவிப்பு:
இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராகவுள்ளதாக நேபாள அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது வல்லுநர் குழு:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர்கள் நியமனம்:
முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் மருத்துவ சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்தே இணைய வழியில் பயிற்சி:
மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி வீட்டிலிருந்தே இணைய வழியில் பயிற்சி அளிப்பது பற்றி முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல்:
மாடுகளை பாதுகாக்கும் வகையில் பசு வதை தடுப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திருத்தத்திற்கு, உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து எரிந்து வரும் எரிவாயு கிணறு:
அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக கொழுந்துவிட்டு எரியும் எரிவாயு கிணற்றை மூடுவதற்காக தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கூடுதலாக 58 விமானங்கள் இயக்கப்படும்:
வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர கூடுதலாக 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவத் தேர்வு நடத்தப்படும் எனவும், ஏப்ரல் மாதத்தில் நடக்க வேண்டிய பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துவித கடன் தவணைகளையும் செலுத்த கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உத்தரவு:
டெஸ்ட் போட்டிகளின் போது பந்தை பிரகாசிக்க செய்ய, வீரர்கள் அதன் மீது எச்சிலை உமிழ தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
Bright Zoom Today News ஜுன் 10 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 10, 2020
Rating:

No comments: