Bright Zoom Today News
ஜுலை 01காலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும்... இன்று முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - செய்திகள் !
உலகச் செய்திகள்
விமானங்கள் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை:
பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் பகுதியில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இன்று முதல் தொடங்கியுள்ள இந்த தடை 6 மாதங்களுக்கு நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய வான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் முடிவு:
சீனா உட்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்து விட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டணமில்லா சிகிச்சை:
சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:
கேரளாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 98.82 சதவீத, மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.71 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.
வங்கி சேவைக்கு மீண்டும் கட்டணம்:
வங்கிகளின் சேவைகள் மற்றும் ஏ.டி.எம்-கள் போன்றவற்றில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் காலாவதியானதையடுத்து வங்கி கட்டணங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
டி.ஜி.பி.திரிபாதி உத்தரவு:
தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அறிவுப்பூர்வமான மனநல பயிற்சி அளிக்க டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு தீவிரம்:
சீனாவின், 59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில் அடுத்தக்கட்டமாக டிவி, ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
மாவட்டச் செய்திகள்
கிராமப்புற கோவில்கள் திறப்பு:
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராமப்புற கோவில்கள் இன்று பக்தர்கள் வழிபடத் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன.
ஜூலை 31ஆம் தேதி வரை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது:
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் 4ஆம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் தொடர் ரத்து:
ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கவிருந்த ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஜுலை 01காலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும்... இன்று முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - செய்திகள் !
உலகச் செய்திகள்
விமானங்கள் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை:
பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் பகுதியில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இன்று முதல் தொடங்கியுள்ள இந்த தடை 6 மாதங்களுக்கு நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய வான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் முடிவு:
சீனா உட்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்து விட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டணமில்லா சிகிச்சை:
சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:
கேரளாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 98.82 சதவீத, மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.71 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.
வங்கி சேவைக்கு மீண்டும் கட்டணம்:
வங்கிகளின் சேவைகள் மற்றும் ஏ.டி.எம்-கள் போன்றவற்றில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் காலாவதியானதையடுத்து வங்கி கட்டணங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
டி.ஜி.பி.திரிபாதி உத்தரவு:
தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அறிவுப்பூர்வமான மனநல பயிற்சி அளிக்க டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு தீவிரம்:
சீனாவின், 59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில் அடுத்தக்கட்டமாக டிவி, ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
மாவட்டச் செய்திகள்
கிராமப்புற கோவில்கள் திறப்பு:
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராமப்புற கோவில்கள் இன்று பக்தர்கள் வழிபடத் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன.
ஜூலை 31ஆம் தேதி வரை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது:
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் 4ஆம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் தொடர் ரத்து:
ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கவிருந்த ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Bright Zoom Today News ஜுலை 01காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 01, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
July 01, 2020
Rating:


No comments: