Bright Zoom Today News
ஜுலை 04 காலை நேரச் செய்திகள்
செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.. மத்திய அரசு அறிவிப்பு - முக்கியச் செய்திகள்..!
உலகச் செய்திகள்
புதிய பிரதமராக நியமனம்:
பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக ஜீன் ஹஸ்டெக்ஸ் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு:
பி.இ, பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்திற்கான சத்துணவு பொருட்களை உலர் உணவு பொருட்களாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை (நீட்) செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யக்கூடும்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 4) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி வரை:
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகம் தொடங்கியது:
நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில், தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கான பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஜூலை 10ஆம் தேதி வரை:
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்ட பகுதிகளில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க முடியாதவர்கள் ஜூலை 10ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.
சென்னையில் முதல் முறையாக:
சென்னையில் முதல் முறையாக இயற்கை முறையிலான கிருமி நாசினி ஆளில்லா விமானம் மூலம் தெளித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கிருமி நாசினி மனிதர்கள் மீது பட்டாலும் பக்க விளைவுகள் கிடையாது என்று தக்ஷா அமைப்பின் செயல் அதிகாரி கூறியுள்ளார்.
தற்காலிகமாக மாற்றம்:
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
லா லிகா கால்பந்து போட்டி:
20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, கெடாபி கிளப்பை சந்தித்தது. முடிவில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் கெடாபி அணியை வீழ்த்தியது.
ஜுலை 04 காலை நேரச் செய்திகள்
செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.. மத்திய அரசு அறிவிப்பு - முக்கியச் செய்திகள்..!
உலகச் செய்திகள்
புதிய பிரதமராக நியமனம்:
பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக ஜீன் ஹஸ்டெக்ஸ் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு:
பி.இ, பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்திற்கான சத்துணவு பொருட்களை உலர் உணவு பொருட்களாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை (நீட்) செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யக்கூடும்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 4) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி வரை:
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகம் தொடங்கியது:
நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில், தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கான பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஜூலை 10ஆம் தேதி வரை:
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்ட பகுதிகளில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க முடியாதவர்கள் ஜூலை 10ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.
சென்னையில் முதல் முறையாக:
சென்னையில் முதல் முறையாக இயற்கை முறையிலான கிருமி நாசினி ஆளில்லா விமானம் மூலம் தெளித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கிருமி நாசினி மனிதர்கள் மீது பட்டாலும் பக்க விளைவுகள் கிடையாது என்று தக்ஷா அமைப்பின் செயல் அதிகாரி கூறியுள்ளார்.
தற்காலிகமாக மாற்றம்:
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
லா லிகா கால்பந்து போட்டி:
20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, கெடாபி கிளப்பை சந்தித்தது. முடிவில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் கெடாபி அணியை வீழ்த்தியது.
Bright Zoom Today News ஜுலை 04 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 04, 2020
Rating:

No comments: